கோவை, செப்.28- ஈஷா மையத்தின் மருத்துவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிறகு, மேல் விசா ரணை தொடங்காமல் இருப்பதும், ஈஷாவில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் கேள்வி எழுப்பியுள்ளனர். கோவை பத்திரிக்கையாளர் மன் றத்தில் ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், தந்தை பெரியார் திராவிட கழ கத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், பேராசியர் காம ராசு ஆகியோர் கூட்டாக சனியன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகை யில், கடந்த 6 ஆம் தேதியன்று ஈஷா அறக்கட்டளையில் பணிபுரியும் டாக் டர் சரவணன் மூர்த்தி சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக் கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேல்விசாரணையை தொடராதது ஏன்? காவல்துறையும், மாவட்ட நிர் வாகமும் விசாரணையை விரிவுப டுத்தாததுக்கு காரணம் என்ன? என்ற கேள்வியை முன் வைத்தனர். மேலும், குற்றச்சாட்டப்பட்ட மருத்து வர் பள்ளியில் இருந்து கிராமப் புற பழங்குடியினப் பகுதிக்கு சென்று மொபைல் கிளினிக் மற்றும் பள்ளிக ளுக்கு சென்றுள்ளார். இது காவல்து றைக்கு நன்றாக தெரியும். அங்கு வேறு ஏதாவது பாதி்க்கப்பட்ட மாணவியர்கள் உள்ளார்களா? என்பதை ஏன் இன்னும் விசாரிக் கவில்லை. மேலும், சுகாதாரத் துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதலின்படி மாணவிகளை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். இந்நி லையில், இவர்கள் ஏன் பெண் மருத்துவரை நியமிக்காமல் இருந்தார்கள்?. கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் சம்பவம், வால்பாறை கல்லூரி மாணவிகள் பாலியல் வன் கொடுமை போன்ற முக்கியமான வழக்கு போன்று, இதை ஏன் விசாரிக் கப்படவில்லை. ஈசாவில் பல பாலி யல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள் ளது. ஆனால் புகார்தாரர் புகாரை வாபஸ் பெற்றால் வழக்கு முடித்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக் கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு சிறுமி தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். ஆனால், அது சட்டத் தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. பின்பு ஒரு அங்குலம் கூட வழக்கு விசாரணை கூட நடத்தப்ப டவில்லை என்றனர். தொடர்ந்து, பேராசிரியர் காம ராசு செய்தியாளர்களிடம் கூறுகை யில், தன்னுடைய இரண்டு மகள்க ளையும் ஈசாவில் இதுவரை பார்க்க முடியவில்லை. கடந்த வருடம் மக ளுக்கு இனிப்பு காரம் கொடுத் ததை இப்போது கொடுத்ததாக பொய் குற்றச்சாட்டு வைக்கிறார் கள். நான் இளைய மகளை பார்க்க முடியவில்லை, மகளை பார்க்க வேண்டும் என நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு பதிவு செய்துள் ளேன். மேலும், பெற்றோர்களின் அனுமதியின்றி பெயர்களை மாற்றி வைத்துள்ளனர். நான் பொது மன் னிப்பு கேட்க வேண்டும் அப்போது தான் தங்களுடன் பேச முடியும் என மகள்களை வைத்து மிரட்டுகி றார்கள் என குற்றச்சாட்டினார்.