சேலம், பிப்.15- ‘2025 ஒன்றிய பட்ஜெட் மக்களுக் கானதா?’ என்ற தலைப்பில் எல்ஐசி காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார் பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற் றது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட் யாருக்கு பயனளிக் கும், பட்ஜெட் மக்களுக்கானதா? என்ற தலைப்பில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சேலம் சுனில் மைத்ரா நினைவரங்கத் தில் வெள்ளியன்று நடைபெற்றது. சிஐ டியு மாவட்ட உதவித்தலைவர் எஸ்.கே. தியாகராஜன் தலைமை வகித்தார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செய லாளர் கே.சுவாமிநாதன் கருத்துரை யாற்றுகையில், ஒன்றிய அரசு எவ் வாறு திட்டமிட்டு சாமானிய மக்களுக் கான திட்டங்களைப் புறக்கணித்து, அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளது என்பதை பட்டிய லிட்டார். மத்திய தர வர்க்கத்திற்கு வரு மான வரிச்சலுகை என்ற பெயரில், எவ் வாறு சாமானிய மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த பட்ஜெட் மடைமாற் றம் செய்துள்ளது என்பதையும், அந்த சலுகை எவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கு செல்லும் என்பதையும் விளக்கினார். கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் உச்சத்தை தொட்ட நிலையிலும், அந்த லாபத்தின் மீது சிறிய வரியைக்கூட விதிக்கவில்லை. ஒன்றிய ஆளும் அரசு கடந்த காலங்களில் நம்பகத் தன்மையற்ற பட்ஜெட்டைத்தான் தாக் கல் செய்து வருகிறது. பட்ஜெட்டில் ஒவ்வொரு அம்சமும் பெரும்பான்மை யான மக்கள் நலனுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது, என்றார். இதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.