districts

img

லெனின் சிலை உடைக்கப்படுவது தான் வளர்ச்சியடைந்த சமுதாயமா?

ஈரோடு, ஆக.11- லெனின் இல்லை என்றால் சோவியத் ரஷ்யா இல்லை. ஆனால், அவரின் சிலைகள் உடைக்கப்படுகின்றன. இது வளர்ச்சி அடைந்த சமுதாயமா? என  திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பி யுள்ளார். ஈரோடு புத்தக திருவிழாவில் சனியன்று நடைபெற்ற சிந்தனை  அமர்வில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, “எது நிரந்தரம்” என்ற தலைப்பில் பேசு கையில், வாழ்வை வளப்படுத்தும் புத்தகச் சந்தை இது. இந்தியாவில் வேறு எந்த பகுதியிலும் இப்படி பார்க்க முடியாது. தமிழ்நாடு அர சும் இணைந்து இந்த விழாவை  நடத்தி வருகிறது. செய்தித்தாளை படிப்பீர்கள். பள்ளிப் பாடத்தை வாசிப்பீர்கள். ஒரு நூலைப் படிக் கிற போது அறியாமை அகலும். அறியாமை அகலும்போது அறிவு  சுடர் விட்டு பிரகாசிக்கும். அறிவு  வளர வளர சிந்தனை கூர்மையா கும். அப்போது எது சரி, எது தவறு  என்று தெரியவரும். ஒரு காலத்தில்  சாதி கட்டமைப்பு நிரந்தரம் என்று  கருதினார்கள். உயர்ந்தவன், தாழ்ந் தவன், உழைக்கப்பிறந்தவன், நசுக் ்கப்படுவதற்கு மட்டுமே பிறந்த வன். உண்டு கொழுப்பதற்கும், உயர்ந்த நிலையிலே இருப்பதற் கும் மட்டுமே என்பதை நிரந்தரம் என்று கருதினார்கள். அது இல்லை  என்பதை இந்த மேடை நிரூபித்துக்  கொண்டிருக்கிறது. அண்ணன், தம்பி, தோழன் என்பதுதான் எங்கள்  உறவு முறை.  கல்வி கற்கும் உரிமையும், தகு தியும் உனக்குப் பிறப்பால் இல்லை  என்று மறுத்தார்கள். பெண்ணாகப் பிறந்தவள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றனர். அதனை மாற்றி விட்டோம். 20  ஆம் நூற்றாண்டு அனைவருக்கும்  கல்வி கொடுத்த காலம். எதெல் லாம் மனிதனை ஒடுக்கி வைத்ததோ, அது நிரந்தரமில்லை என்று சொல்வதற்கு அடித் தளமாக அமைந்தது ஆட்சியும், அதிகாரமும். ஆனால், அது சரி யானவர்களின் கரங்களில் இருந் தாக வேண்டும். லெனின் இல்லை  என்றால் சோவியத் ரஷ்யா  இல்லை. முஜுபூர் இல்லையென் றால் பங்களாதேஷ் இல்லை. அவர் கள் சிலைகள் உடைக்கப்படு கின்றன. இது வளர்ச்சி அடைந்த சமுதாயமா? 2500 ஆண்டுகளுக்கு முன்பு சாதி இல்லை, சமயம் இல்லை, மனிதனுக்குள்ளே ஏற் றத்தாழ்வு இல்லை என்று சொன்ன  உலகின் முதல் தத்துவ ஞானி புத் தன் சிலையை உடைக்கிறான்.  விடுதலைப் போராட்ட காலத் தில் வெள்ளைக்காரன் பல சலுகை களைக் கொடுத்தாலும், அடிமை யாக இருக்கத் தயாரில்லை என்று  பெரும் கூட்டம் இருந்தது. ஆனால், இன்றைக்கு நான் அடிமையாக இருக்கிறேன், எனக்கு என்ன தரு கிறாய் என்னும் கூட்டம் பெருகி விட் டது. இப்போது அடிமைகள் கிடை யாது, அடிமைத்தனம் அதிகமாகி விட்டது. இப்படிப்பட்ட நாடு எந்த காலத்திலும் எழுச்சி பெறுவதற்கு மிகுந்த சிரமப்பட்டாக வேண்டும். நாடாண்ட மன்னர், கோட்டை  கட்டி வாழ்ந்தவர்கள் எத்தனையோ  பேர் இருந்தார்கள். அவர்கள் நினைவு மக்களிடம் இல்லை.  ஆனால், தொல்காப்பியர் இருக் கிறார். திருவள்ளுவர், இளங் கோவடிகள் இருக்கிறார்கள். வால் மீகியும், கம்பனும் இல்லையென்றால் ராமனை யாருக்கும் தெரிந்திருக்காது. உல கம் ஒரு காலத்தில் அழியக்கூடும். மனிதன் வாழ்ந்தபோது இருந்தது என்பதை ஒன்று சேர்த்து ரஷ்ய நாட் டின் கிரெம்ளின் மாளிகை அரு கில் அணு ஆயுதங்கள் துளைக்க  முடியாத, எந்த இயற்கை சீற்றத்தி னாலும் பாதிக்கப்படாத ஒரு பெரிய பாதுகாப்பான கூண்டை உரு வாக்கி அதற்குள்ளே சேர்த்து வைக்கிறார்கள். அதில் ஒன்று திருக்குறள். திருவள்ளுவர் பேசி  விட்டு போயிருந்தால் மறைந்து போயிருக்கும். அவர் எழுதி வைத் தார். யாரெல்லாம் எழுதி வைத்தார் களோ அவர்கள் நிரந்தரமாக இருக் கிறார்கள். எனவே எழுத்து மட்டும்  தான் நிரந்தரம். இவ்வாறு அவர் பேசினார்.