திருப்பூர், ஜூலை 28 – திண்டுக்கல் மாவட்டம் கள்ளி மந்தயத்தில் 1000 ஏக்கர் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள நிலையில், அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் ரகசியத் திட்டம் உள்ளதாகவும், அதை உட னடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாது காப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டத்தில் இவ்வமைப்பின் ஒருங் கிணைப்பாளர் முகிலன் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டம், கள்ளி மந்தயம், ஈசக்காம்பட்டி, தேவத்தூர், பொருளூர் மற்றும் வல்லகுண்டா புரம் பகுதியில் 1000 ஏக்கர் நிலத் தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தில், இதற்கு தேவையான பல கோடி லிட்டர் தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படும் என அரசு தெரிவிக்கவில்லை. இத் திட்டத்திற்காக, அமராவதி ஆற்றில் தண்ணீர் எடுத்தால் திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை கடுமையாக பாதிக்கப்படும். மேலும், காங்கேயம் வட்டம் தம்மரெட்டிபாளையம் ஊராட்சியில், திருப்பூர் தங்கம்மன் கோவில் - ஈரோடு மாவட்டம், கொடுமணல் கிரா மத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டுவதற்கு அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது. நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடி செல வில் கட்டப்பட இருந்த பாலம், 200 மீட்டர் தூரத்தில் உள்ள வெங்கலப் பாளையம் ஜெயபால் கல்குவாரிக் காக கைவிடப்பட்டது. இதை, 300 மீட்டர் சுற்றளவில் பல்வேறு வீடு இருப்பதை மறைத்து அனுமதி பெற்ற ஜெயபால் கல்குவாரியை மூடி பாலம் கட்டுவதை நடைமுறைப் படுத்த வேண்டும். ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று நடக்க இருக்கும் சிவன்மலை டாமின் கிரானைட் குவாரி, மற்றும் ஆக.22ஆம் தேதியன்று நத்தக் காடையூர் - பழையகோட்டையில் குட்டப்பாளையம் ஆர்பி குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கும் சமூக செயல்பாட்டா ளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.