அரசு விழாவில் பாஜக தலைவரை அனுமதித்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், மத்திய அமைச்சரும், மாநில அமைச்சரும் கலந்து கொண்ட விழா மேடையில், எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கு.ராமகிருட்டிணன் கூறியதாவது: அரசு விழாவில் ஒரு அரசியல் கட்சியின் விழாவாக மாற்றிய பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டிக்கிறோம் தமிழக அரசு உடனடியாக இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். இதை அரசு விதிகள், பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கின்றதா? என கேள்வி எழுப்பினார் . அரசு விழா மேடையில் பிஜேபி தலைவரை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.