தருமபுரி, ஆக.20- பெண் அதிகாரிகளை பழிவாங் கும் நடவடிக்கையை கைவிட வேண் டும் என வலியுறுத்தி, தருமபுரியில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தி னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்போர் பட்டியலில் உள் ளோருக்கு முன்னுரிமை வழங்கா மல், ஒருதலைப்பட்சமாக வெளியிடப் பட்ட பணியிட மாறுதல் ஆணையை திரும்பபெற வேண்டும். உடல் ஊன முற்றோர் பிடபுள்யூடி-யில் பணிய மர்த்தப்பட்ட அதிகாரிக்கு வழங்கப் பட்ட பணியிட மாறுதல் ஆணையை திரும்பப்பெற வேண்டும். உடல் நிலை மருத்துவ விலக்குகளின் கீழ், பணியிட மாறுதல் கோருபவர்கள், விலக்கு கோருபவர்களை பரிசீ லனை செய்ய வேண்டும். ஓசூரில் உள்ள தொலைபேசி நிலையங்களில் 400க்கும் அதிகமான மரங்களை வெட்டி, திருடியவர்கள் மீது வழக் குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், பிஎஸ்என்எல் சொத்துக்களை பாது காக்க தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். செயல்திறன் என்ற பெயரில், பெண் அதிகாரிகளை தொடர்ந்து பழிவாங்கும் நடவ டிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, அகில இந்திய பட்டதாரி பொறியாளர் மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் சங் கத்தினர் உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் திங்களன்று நடைபெற்ற போராட் டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆர்.ரமன்னா தலைமை வகித் தார். இதில் மாவட்டச் செயலாளர் பி. பிரபாகரன், மாவட்டப் பொருளாளர் எம்.பி.பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.