districts

உழவர் சந்தையில் நடைபெறும் முறைகேடுகள்: தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், டிச.13- உடுமலைப்பேட்டை உழவர் சந்தையில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட  தலைவர் எஸ்.ஆர் மதுசூதனன் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, உடுமலைப் பேட்டை உழவர் சந்தையில் மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றிய குறு சிறு விவ சாயிகள் காய்கறிகளை விற்பனை செய்யவும்  உடுமலை நகர்வாழ் மக்களுக்கு நியாய விலையில் பசுமையான காய்கறி கிடைக் கும் இடமாக செயல்பட்டுக் கொண்டிருந் தது. இந்நிலையில், உழவர் சந்தையில் 6 மாதங்களுக்கு முன் நிர்வாக அதிகாரியாக சேலத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர்  பொறுப்பேற்றுள்ளார். இவர் பொறுப்பேற்ற பின் வாரத்திற்கு மூன்று நாட்கள் இங்கு இருந்துவிட்டு சேலத்துக்கு சென்று விடு கிறார்.

மற்ற நாட்களில் உழவர் சந்தையை உதவி நிர்வாக அலுவலர்கள் இருவர் கவ னித்து வருகின்றனர். உழவர் சந்தை நிர்வாகியாக உள்ள சீனி வாசன் தொடர்ச்சியாக விவசாயிகள் மீது வீண் புகார்கள் கூறுவதும், மோசமான முறை யில் விவசாயிகளை நடத்துவதால் விவசாயி கள் உழவர் சந்தைக்கு வருவதே இல்லை. 80  கடைகள் இருக்கும் நிலையில், 50 முதல் 60  கடைகள் மட்டும் தான் தினசரி செயல்படுகி றது. சுழற்சி முறையில் கடைகளை ஒதுக்கு வதற்கு பதிலாக நிரந்தரமாக கடைகளை ஒரு வருக்கே ஒதுக்குவதும். அதற்கு விவசாயிக ளிடம் மாதத்திற்கு ஒரு கடைக்கு 500 ரூபாய்  முதல் 1000 ரூபாய் வரையிலும் பெறப்படுகி றது. இதற்கு உடந்தையாகவே உதவி நிர்வாக  அலுவலர்களும் செயல்பட்டு வருகின்றனர். உழவர் சந்தை உழவர்களுக்கான சந்தை யாக இல்லாமல் பெரும்பகுதி வியாபாரிகள்  பயன்படுத்தும் சந்தையாக மாறி உள்ளதும்.  தினசரி அங்காடியில் காய்கறி வாங்கி வந்து  வியாபாரிகள் இங்கே விற்பனை செய்வதும்,  அவர்களிடம் முறைகேடாக பணம் பெற்றுக்  கொண்டு அனுமதி அளிப்பது நடைமுறை யில் உள்ளது. உழவர் சந்தையில் நடைபெறும் முறை கேடுகள் குறித்து கோவை துணை இயக்குந ரிடம் புகார் செய்யலாம் என்றால் அந்த இடம்  காலியாக உள்ளது. நீலகிரி மாவட்டத் துணை  இயக்குநர் பொறுப்பு என்பதால் அவரது கைப்பேசிக்குப் பலமுறை தொடர்பு கொண் டும் பதில் அளிக்கவில்லை.

எனவே இது குறித்த புகாரை கடந்த டிச.5 ஆம் தேதி மாவட்ட வேளாண்மை நலத்துறையின் இணை இயக்குநருக்கு தெரிவித்தும். இது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.  உழவர் சந்தையில் நடைபெறும் முறைகேடு கள் குறித்து விவசாயிகள் தனிப்பட்ட முறை யில் புகார் செய்த காரணத்தால், இரண்டு குறு  விவசாயிகளிடம் அட்டையை பறித்து வைத்துக் கொண்டு சந்தைக்கு வரக்கூடாது என நிர்வாக அலுவலர் கூறியுள்ளார்.  காய் கறி உற்பத்தியில் ஈடுபடாத கரிசல் நிலம்  மட்டுமே வைத்துள்ள ஒருவர் 10 வகை காய்க றிகள் வைத்து வியாபாரம் செய்து வருகி றார். கணவருக்கு ஒரு கடை மனைவிக்கு ஒரு  கடை என இரண்டு கடையை ஒரே குடும்பத் திற்கு அனுமதித்துள்ளார். இக்கடைகளில் பல வகை மலை காய்கறி விற்பனை செய்கின் றனர். உடுமலை நகரில் குடியிருக்கும் ஒருவர்  ஊட்டியில் நிலம் வைத்துள்ளதாக தெரிவித்து  12 வகை காய்கறிகளை தினசரி அங்காடியில்  வாங்கி வந்து வியாபாரம் செய்கின்றார். இறந்து போனவரின் அட்டையை அவருக்கு  சம்பந்தமில்லாதவர் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய அனுமதி அளித்துள்ளார். தென்னந்தோப்பு மட்டும் வைத்துள்ள ஒரு வர் பத்து வகையான காய்கறிகளை உடு மலை நகரில் சந்தையில் வாங்கி வந்து விற் பனை செய்ய அனுமதித்துள்ளார். உழவர்  சந்தை எந்த நோக்கத்திற்குத் துவங்கப்பட் டதோ அதிலிருந்து மாறுபட்டு, மோசமான  நிலையில் உள்ளது. உரிய நடவடிக்கை  எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள் ளது.