திருப்பூர், ஜூன் 27 - ஜப்பான் ஆயத்த ஆடை சந்தைக்கு பின்னலாடைகளை தயாரித்து அனுப்ப திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் முன் வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தில் வியாழன் அன்று ஜப்பான் பாணி லான தரக்கட்டுப்பாடு மற்றும் ஆய்வ கம் அமைப்பது தொடர்பான கலந்து ரையாடல் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுச் செயலாளர் என்.திருக்குமரன் வரவேற்றார். மும்பை டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி இயக்குனர் ஜே.டி.பர்மன் இக் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச் செயலாளர் டி. குமார், திருப்பூ ரில் நீடித்த நிலையான வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கிக் கூறினார். இதையடுத்து ஜப்பானிலிருந்து வந் திருந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் உரையாற்றினர். அவர்கள் கூறும் போது, ஜப்பான் தங்களுக்கு தேவை யான ஆடைகளை தற்சமயம் சீனாவில் இருந்தும் வங்கதேசத்தில் இருந்தும் இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா விலிருந்து ஜப்பானுக்கு அனுப்பப்படும் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதி ஒரு சத வீதம் மட்டுமே ஆகும். தற்போது ஜப் பான் வாடிக்கையாளர்களும், வர்த்தகர் களும் இந்திய பின்னலாடைகள் மீது கவ னம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஜப்பானில் இந்தியாவின் ஜெய்ப் பூர் நகரம் தெரியும். ஆனால் திருப்பூர் நகரம் பற்றி தெரியவில்லை. எனவே திருப்பூர் நகரம் பின்னலாடை உற்பத்தி யில் சிறப்பாக விளங்குவது குறித்து ஜப்பான் வர்த்தகர்களுடன் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு பின்னலாடை வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும். இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறி னர். அத்துடன் ஜப்பான் வாடிக்கையா ளர்கள் 100% தரக்கட்டுப்பாட்டுடன் பின் னலாடைகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனவே அதற்கு ஏற்ற முறையில் ஜப்பான் தரக்கட்டுப் பாட்டு முறையினை அதற்குரிய ஆய்வ கங்களை இங்கு அமைக்க வேண்டும். டெக்ஸ்டைல் கமிட்டி இந்த ஆண்டு இறு திக்குள் அல்லது அடுத்த ஆண்டுக்குள் ஜப்பானிய தரக்கட்டுப்பாட்டு ஆய்வ கங்களை இங்கு அமைக்க முயற்சி மேற் கொண்டுள்ளது. எனவே நல்ல வர்த்தக வாய்ப்பு திருப்பூருக்கு கிடைக்கும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஜப்பான் சந்தையில் வர்த்தகம் செய்ய முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னர். டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியின் ஆய்வ கங்கள் இயக்குனர் கார்த்திகை தண்டா ஜப்பானில் உள்ள மொழி, கலாச்சாரம், வர்த்தக உறவு குறித்து விளக்கி கூறி னார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஏற்றும தியாளர்கள் ஜப்பானில் வர்த்தகம் செய் வது குறித்து தங்களது முன்னெடுப்பு கள், அனுபவங்கள் மற்றும் கேள்வி களை எழுப்பினர். நிறைவாக டெக்ஸ் டைல்ஸ் கமிட்டி துணை இயக்குனர் எஸ்.கௌரிசங்கர் நன்றி கூறினார்.