districts

img

பாஜகவின் ரவுடித்தனம் இங்கு செல்லாது கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேட்டி

கோவை, ஏப்.12- பாஜகவினர் அதிகாரத்தை கையில்  எடுத்துக் கொண்டு சாதகமான நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் கள். இந்த மிரட்டல் எல்லாம் கோவை யில் எடுபடாது என கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.  கோவை மக்களவைத் தொகுதியில்  பாஜக வேட்பாளராக உள்ள அண்ணா மலை, வியாழனன்று ஆவாரம்பாளை யம் பகுதியில் விதிகளை மீறி தேர் தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதைப் பார்த்த திமுக, சிபிஎம் மற்றும் அப்ப குதியினர், காவல்துறையினரிடம் முறையிட்டனர். அப்போது, அண்ணாம லையுடன் வந்த பாஜக குண்டர்கள், கேள்வி கேட்ட திமுகவினரை சரமாரி யாக தாக்கி உள்ளனர். இதில், திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு, மோகன்ராஜி, குண சேகரன், செல்லப்பா, சேகர், சதீஷ் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் காயம்  அடைந்தனர்.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “கோவை அமை தியை விரும்பும் நகரம். இங்கு ரவுடி சம் எடுபடாது. பாஜகவின் சுயரூபம் வெளியே வந்துள்ளது. பாஜகவினர் தோல்வி பயத்தில் வெளிமாநில ஆட்களை ஊடுருவ செய்து கலவ ரத்தை உருவாக்கலாம் என ஐயம் எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாண வர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதற்கு ஆதா ரம் உள்ளது. இவற்றை தேர்தல் ஆணை யம் கவனிக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார பூர்வமாக புகார் அளித்தும் தேர்தல்  ஆணையம் நடவடிக்கை எடுக்க வில்லை. தோல்வி பயத்தில் தேர்த லுக்கு இடையூறு செய்ய பாஜகவினர் திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் வருகி றது. நடுநிலையோடு தேர்தல் நடத்தப் பட வேண்டும். ஆளுங்கட்சியாக நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கி றோம். பாஜகவினர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு சாதகமான  நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் கள். இந்த மிரட்டல் எல்லாம் கோவை யில் எடுபடாது” எனத் தெரிவித்தார். திமுக மாநகர் மாவட்டச் செயலா ளர் நா.கார்த்திக் விடுத்துள்ள அறிக்கை யில், அண்ணாமலை தேர்தலில் நிற் கும்போதே விதிமுறைகளை அடாவ டியாக, ஆதிக்க வெறியுடன், சட்டத்தை  மீறுகின்றார். தினமும் அனுமதிக் கப்பட்ட நேரத்தை மீறி தான் பிரச்சா ரம் மேற்கொள்கின்றார். கோவையில் எத்தனையோ தேர்தல் நடந்துள்ளது. ஆனால் இப்படி அடாவடியாக யாரும்  நடந்ததில்லை. ஆனால் பாஜக அண் ணாமலை பாசிச மதவெறியை தூண்டி விட்டு ஆணவத்துடன் நடந்துள்ளார். அதிகார திமிரை காண்பித்துள்ள அண்ணாமலையின் செயல் வன்மை யாக கண்டிக்கத்தக்கது. எனவே, தேர் தல் ஆணையமும், காவல்துறையும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். வழக்குப்பதிய வேண்டும்.  இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்களை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும்  என்றார்.