districts

img

அமெ.நிறுவனங்களின் ஒப்பந்தம் மூலம் 11,516 பேருக்கு வேலை வாய்ப்புகள்

சென்னை, செப்.15- அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக் கும் என்று தமிழகம் திரும் பிய முதலமைச்சர் தெரி வித்துள்ளார். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.  சான் பிரான்சிஸ்கோ வில் நடந்த தொழில் முத லீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், கூகுள் உள்ளிட்ட நிறுவ னங்களின் உயர் அலுவலர்க ளை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.  இதைத் தொடர்ந்து, சிகா கோவுக்கு சென்று  அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இரு நகரங்களிலும் பல்வேறு தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகி கள், அமெரிக்கா வாழ் தமி ழர்களை சந்தித்தார். இந்நிலையில் அமெ ரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 14 அன்று சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலி னுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலர் உற்சாக வர வேற்பு அளித்தனர்.  பின்னர் விமான நிலை யத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தக வல்களையும் பகிர்ந்து  கொண்டார்.  அவர் கூறுகை யில், அமெரிக்காவில் 17  நாட்களில் 25 நிறுவனங்க ளுடன் மேற்கொண்ட சந்திப் பில் ரூ.7,618 கோடி மதிப்பி லான 19 புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் கையெழுத் தாகின. இதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசின் வேண்டு கோளை ஏற்று ஃபோர்டு நிறு வனம் மீண்டும் தமிழகத்தில் செயல்பட முன்வந்துள்ளது. அமெரிக்கப் பயணம் தமிழ் நாட்டு மக்களுக்கு சாதனைப் பயணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.

ஒன்றிய அமைச்சர் நடந்த விதம் வெட்ககரமானது!

பின்னர் கோவையில் அன்னபூர்ணா ஓட்டல் உரி மையாளர் சீனிவாசன் மன்னிப்புக்கேட்ட வீடியோ வெளியான விவகாரம் பற்றி கேட்டதற்கு, “இந்த விவ காரத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரா மன் நடந்த விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று”என்றார். விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, அது அரசியல் மாநாடு அல்ல என்பதை திரு மாவளவன் அவரே தெரி வித்துவிட்டார்” என்றார்

10 விழுக்காடு  கூட முதலீடு பெறாத இபிஎஸ்!

வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக அதிமுக எடப்பாடி பழனிசாமி, பாமகவின்  ராமதாஸ், அன்பு மணி, சீமான் உள்ளிட்டோ ரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப் படும் தொழில் முதலீடுகள் குறித்து நானும் தொழில் துறை அமைச்சரும் விளக்கம் அளித்துள்ளோம். ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது மேற்கொண்ட வெளி நாட்டுப் பயணங்கள் மூலம் 10 விழுக்காடு கூட முதலீடு பெறப்படவில்லை. வெளிநாட்டு முதலீடு தொ டர்பாக எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோரு வது வெறும் அரசியலே” என்று கூறினார். பிரதமரிடம் வலியுறுத்துவேன் புதிய கல்விக் கொள்கை திணிப்பு,  மெட் ரோ திட்டத்திற்கு நிதி வழங்காமை குறித்து  கேட்கப்பட்ட கேள்விக்கு, “ மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, பள்ளிக் கல்வித்துறையின் நிதிக்கு, புதிய கல்விக் கொள்கை  குறித்து ஏற்க னவே சம்பந்தப்பட்ட அமைச் சரையும், அதிகாரிகளையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். இதுகுறித்து பிரதமரிடம் உடனடியாக நேரம் கேட்டு, நானும் அது குறித்து வலி யுறுத்த இருக்கிறேன் என்பதை உறுதியோடு தெரி வித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.