கோவை, நவ.17- கோவை ஈசா யோகா மையத் தில், பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கு எதிராக நடக்கும் செயல் களை கண்டித்து, நவ.23 ஆம் தேதி யன்று போராட்டம் நடைபெற உள்ளதென, சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் தெரிவித் துள்ளார். கோவை பூ மார்க்கெட் பகுதி யிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் அலுவலகத்தில், அக்கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத் தரசன் ஞாயிறன்று செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈஷா அறக்கட்டளை, யோகா என்கிற பெயரில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த யோகா மையத்தில் பல்வேறு விதமான தவறு கள், பெண்களுக்கு எதிரான தவறு கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஜக்கி வாசுதேவ் மீது ஏற் கனவே பல்வேறு வழக்குகள் உள் ளன. பெண்கள் யோகா பயிற்சிக் காக சேர்க்கப்பட்டு, மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். குடும்பத்தி னரையே அந்த பெண்கள் சந் திக்க மறுக்கிறார்கள். பெண்களுக்கு அங்கு மொட்டை அடிக்கப்படுகிறது. பழங்குடி மக்களின் நிலங்கள் பறிக் கப்பட்டு, ஈஷா மையத்துடன் சேர்க் கப்பட்டிருப்பதாக அறிக்கை வரு கிறது. பிரதமர், குடியரசுத் தலை வர், பிற மாநில முதலமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோர் எல்லாம் ஈஷாவிற்கு செல்கின்ற னர். இதனால் தான் ஈஷா மீது நட வடிக்கை எடுக்க முடியாமல் தடுக் கப்படுகிறது. ஈஷா நிறுவனரை பாதுக்காப்பது ஒன்றிய அரசு தான். மணிப்பூரை பார்க்க பிரதமர் செல்ல வில்லை; ஆனால் ஈஷாவிற்கு செல்கிறார். யோகா மையத்தில் தகன மேடை இருப்பதற்கு என்ன அவசி யம்? அரசு அனுமதி உள்ளதா? ஈஷா யோகா மையம் நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தாக தகவல்கள் வருகிறது. வன நிலத்தை ஏழை மக்கள் ஆக்கிர மிப்பு செய்திருந்தால் உடனே வெளியேற்றப்படுகின்றனர். இப் போது ஈஷாவிற்கு மட்டும் யார் அனுமதி கொடுத்தது? ஈஷா மீது பொது விசாரணை மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள பெண் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப் படைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். ஈஷா நிறுவனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியு றுத்தி நவ.23 ஆம் தேதியன்று, சிவா னந்தா காலனியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வன விலங்குகளை பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களது பணி வனவிலங்குகள் வேட்டை யாடப்படுவதை தடுத்து பாதுகாப் பது என்பதாகும். பழங்குடி மக்கள் தான் இதற்கான பணியில் சேர்க்கப் பட்டுள்ளனர். தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறி வரும் நிலையில், அதனை தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரி கிறது. அது உண்மையெனில் அரசு அதை கைவிட வேண்டும். மேலும், சூலூரில் பாரத் பெட்ரோலியம் எண் ணெய் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதாக தெரிகிறது. எந்த மாவட்டமாக இருந்தாலும் விவசா யம் பாதுகாக்கப்பட வேண்டும். விளை நிலத்தை பாதிக்கும் வகை யில் எந்த நடவடிக்கையாக இருந் தாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கும், என்றார். மேலும், ஆளு நர் பற்றிய கேள்விக்கு, கீழ்ப்பாக் கம் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவர், ஆளுநராக இருக் கிறார். திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தாற்போல் இதழில் அச்சிடுகிறார். வள்ளுவரை சிறுமைப் படுத்துவது போல் செயல்படு கிறார். தமிழக அரசாங்கமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இரு மொழி கொள்கையில் தான் உறுதியாக உள்ளது, என்றார்.