திருப்பூர், டிச.5- சர்வதேச தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சிக்கண்ணா கல்லூரி மாணவ, மாணவிகள் வீடு வீடாக சென்று புளு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு செய்தனர். சர்வதேச தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவர்கள் செவ்வாயன்று எம்.ஜி.ஆர் நகரில் ஃபுளு காய்ச்சல் பற்றி வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், மாணவ பிரதிநிதி மது கார்த்திக் முன் னிலை வகித்தார். மாணவ செயலர்கள் தீபன் சந்தோஷ், செர் லின், குணா, தினேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் வீடு வீடாக சென்று ஃபுளு காய்ச்சல் இன்ஃபுளுவென்சா வைரசால் உண்டாகிறது. இந்த காய்ச்சல் எளிதாக பரவக்கூடிய நோய், அதிக காய்ச்சல், சளி, தொண்டை வலி, தசை வலி, தலைவலி, இருமல், உடல் சோர்வு போன்ற அறிகுறி கள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இந்நோய் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப கூடாது என்று கூறினர். மேலும் விழிப் புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத் தினர். அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் செய்திருந்தனர்.