உதகை, ஆக 10- உதகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வனத்துறை மற்றும் மாவட்ட பழங்குடி மக்களுடன் இணைந்து பூர்வ குடிமக்களின் சர் வதேச தின விழா வெள்ளியன்று உதகையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் பங் கேற்றனர். நீலகிரி மாவட்டத்தில் பண் டைய பழங்குடியின மக்களான தோடர், கோத்தர், இருளர், காட்டு நாயக்கர், பணியர், குறும்பர், முள்ளு குறும்பர் ஆகிய பழங்கு டியின மக்கள் வசித்து வருகின்ற னர். 1995 ஆம் முதல் ஆண்டுதோ றும் பூர்வ குடிமக்களின் சர்வதேச தின விழா கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. பழங்குடியினரின் கலாச்சா ரம், உடை, இசை, மொழி உள்ளிட் டவற்றை பொதுமக்களிடையே விழிப்புணர்வு வகையில் நடைப் பெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக வெள்ளி யன்று உதகை பழங்குடியினர் பண் பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வா கம், மாவட்ட வனத்துறை மற்றும் மாவட்ட ஊராட்சி பழங்குடி மக்கள் ஆகியோர் இணைந்து பூர்வ குடி மக்களின் சர்வதேச தின விழா நிகழ்வு நடைபெற்றது. இதில், மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகி யோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீல கிரி மாவட்டத்தில் 7 பழங்குடியினர் கள் தொன்மை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 2 ஆயி ரம் மலை கிராமங்களில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாத மலை கிரா மங்களுக்கு நடந்து சென்று மருத் துவ வசதிகள் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தரப்பட்டுள் ளது. பழங்குடியின மக்களுக்கு ஏற் படும் சிக்கன்செல் உள்ளிட்ட நோய் களுக்கு 40 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதியில் வசிக்கும் பழங் குடியின மகப்பேறு பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை இந்தியா விலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. உதகையில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையை 45 நாட்களில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். 700 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பழங்குடி யின மக்களுக்கு என 50 படுக்கை வசதிகள் கொண்ட தனிப்பிரிவு உரு வாக்கப்படும். நீலகிரி மாவட்டத் திற்கு 47 கோடி மதிப்பீட்டில் பல் வேறு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பழங்குடி யின மக்களுக்கு நலத்திட்டங்களை அமைச்சர்கள் வழங்கினார்.முன் னாதாக பழங்குடியின மக்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் பழங் குடியின மக்களின் அரங்குகளை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் லட்சுமி பவியா தண்ணீரு, துணை ஆட்சியர் கொளஷிக், முது மலை புலிகள் கப்பாக கள இயக்கு நர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், பழங்குடியின மக்கள் என பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட் டத்தில் சத்தியமங்கலத்தை அடுத் துள்ள கடம்பூர் மலைப் பகுதியில் வெள்ளியன்று உலக பழங்குடியி னர் தினத்தையொட்டி பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து பழங் குடியினர் நடனமாடியது அனை வரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்வை, மாவட்ட தாட்கோ மேலாளர் அர்ஜுன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பரண் பழங்குடியின சங்கத் தலைவர் கென்னடி, ஒருங்கிணைப் பாளர் கோகுல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.