கோவை, டிச. 31 கோவையில் வெள்ளியன்று நடைபெற்ற சர்வ சமய மத நல்லிணக்க விழாவில் மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண் டார். கோவை மாவட்ட ஐக்கிய ஜமா அத் சார்பில் ஒன்றினைவோம் கோவைக்காக சர்வ சமய மத நல்லிணக்க விழா, கோவை சிரியன் சர்ச் சாலை இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் அரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். ஐக்கிய ஜமாத் பொதுச்செயலா ளர் அப்துல் ஜப்பார் வரவேற்புரை ஆற்றி னார். இந்நிகழ்வில், முன்னாள் கோவை மாவட்ட நீதிபதி அகமது ஜியாவுதீன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாந கர மாவட்ட திமுக செயலாளர் ந.கார்த்திக், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜீனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மதிமுக தேர்தல் பணி துணைத் செயலாளர் அ.சேதுபதி, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மரு தாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமர குரு பர சுவாமிகள், சி.எஸ்.ஐ பிஷப் திமோத்தி, குருத்வாரா சிங் சபா தலைவர் குர் பிரீத்சிங், ஒய்வுபெற்ற இ.எஸ்.ஐ. இணை இயக்குநர் பஷீர் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் கபூர், பிஷப் திமோத்தி ரவீந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மார்க் சிஸ்ட் கட்சியின், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், இவ்விழா இச்சூழலில், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எந்த செயலிலும், சூழ லிலும் ஒரு அசம்பாவிதம் நேர்ந்தால், அந்த சம்பவதில் தொடர்புடைய நபரின் சமயத்தை, சமூகத்தை தொடர்புபடுத்துவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இதை பல்வேறு வடிவங்களில் அனைத்து சமய, சமூக மக்க ளும் மக்களின் நலன் கருதி ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். அதேபோல ஒரு சம்பவத்தில் மக்களுக்கு நேரும் இடர்களை தவிர்க்க மனதார நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண் டும், என்றார். இந்நிகழ்வின் இறுதியில் செல் வபுரம் ஹயாதுல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் தலைவர் இப்ராகீம் நன்றி கூறினார்.