கோவை, ஜன.25- பன்னிமடை சுற்று வட்டாரப் பகு தியில் புகுந்து பொதுமக்களை அச் சுறுத்தி வரும் காட்டு யானையை விரட்ட கும்கி யானையை வனத் துறையினர் கொண்டு வந்து உள்ள னர். கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, பழை யூர் புதூர், தாளியூர், வண்டிக்கார னூர், பொன்னூத்தம்மன் கோவில் சுவாமி பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய விலைப் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இந்நிலை யில், கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை இரண்டு பேர் தாக்குதலால் உயிரிழந்தனர். இதனையடுத்து, டாப்ஸ்லிப் கோழிக் கமுதி வளர்ப்பு யானை கள் முகாமில் இருந்து முத்து என்ற கும்கி யானையை கொண்டு வந்து உள்ளனர். வெள்ளியன்று இரவு ஆறு குழுக்களாக பிரிந்த வனத் துறையினர் தீவிர ரோந்துப் பணி யில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு முறை காட்டு யானையானது ஊருக் குள் புகுந்து உள்ளது. இருந்த போதும் வனத் துறையினர் துரித மாக செயல்பட்டு அந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்டி உள்ள னர். அந்த யானை வண்டிக்கார னூர் பகுதியில் உள்ள நந்தகுமார் மற்றும் சோமையம்பாளையம் பகு தியில் உள்ள சுந்தரம் என்பவர் தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு உள்ள தென்னை, வாழை அங்கு போடப்பட்டு இருந்த போர்வெல் மோட்டர்களையும் சேதப்படுத்தி உள்ளது. இதனால், அப்பகுதி மக் கள் கடும் அச்சம் அடைந்து உள்ள னர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தொடர்ந்து நாங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றோம். யானை வனப் பகு திக்குள் செல்லாமல் தொடர்ந்து ஊருக்குள்ளே சுற்றித் திரிந்து வருவதால், கும்கி யானை உதவி யுடன் வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். மேலும் ஒரு கும்கி யானை வால் பாறை பகுதியில் இருந்து சனி யன்று மாலைக்குள் வந்து விடும். அந்த யானை தொடர்ந்து ஊருக் குள் புகுந்தால் அந்த யானையைப் பிடித்து வேறு பகுதிக்கு இடமாற் றம் செய்வது தொடர்பாக உயர் அதி காரிகளுடன் பேசி முடிவு எடுக் கப்படும், என்றார்.