districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

உதகை, ஜூன் 11- நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை சுத்தம் செய் யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்தாண்டு திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். இதன்பின் னர் கடந்த மாத இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளி களும் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதை யொட்டி கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு  வருவதால் பள்ளிகள் அனைத்தையும் தூய்மையுடன் தயார் நிலையில் வைக்க வேண்டுமென்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் வெ.இறை யண்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடந்து வருகின் றன. இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறு கையில், நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 700 பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பள்ளிக்கூட வளா கம், வகுப்பறைகள், மைதானம்,  கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கழிப்பறை களில் துர்நாற்றம் வீசாமல் இருக்க அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி வளா கத்தில் உடைந்து கிடந்த பொருட்கள், கட்டிட இடிபாடுகளை அகற்றி விசால படுத்தப்பட்டு உள்ளது. விளையாட்டு மைதா னங்களில் இருந்த சிறு சிறு பள்ளங்கள் சரி செய்யப்பட்டு வரு கிறது. கரும்பலகைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு வருவதால் பளிச்சென்று காட்சியளிக்கின்றன.  இந்தப் பணியில் தலைமை ஆசிரியர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதேபோல் பள்ளிக் கூடம் திறக்கும் தினத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, என்ற னர்.

கந்துவட்டி கேட்டு மிரட்டல்

சேலம், ஜூன் 11- சேலம் அருகே கந்து வட்டி கேட்டு மிரட்டியவரை காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து தேடி வரு கின்றனர். சேலம் மாவட்டம், மல் லூர் அருகே உள்ள சமத்துவ புரம் பகுதியைச் சேர்ந்த வர் சவுந்தரராஜன், பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வாழகுட்டப்பட்டி பகுதி யைச் சேர்ந்த பூபதி என்பவ ரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.80 ஆயிரம் பணம் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனாலும், பூபதி மேலும் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து மல்லூர் காவல் நிலையத்தில் சவுந் தரராஜன் புகாரளித்தார். அதன்போரில், காவல் துறை யினர், பூபதி மீது கந்துவட்டி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

கோவை, ஜூன் 11– சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவையைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கற்பகம் விசாரணை நடத்தி வந்தார். அதில், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கோவை செல்வபுரத்தை சேர்ந்த கணேசன் (27) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர், கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் போக்சோ வழக்கில் கணேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், சிறுமியை கடத்திய வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

கோவை, ஜூன் 11- தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் எந்தி ரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம், சூலூர் அருகே  உள்ள குளத்தூரில் அட்டை பெட்டிகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத் தில் சூலூர் ராவத்தூர் பகுதியைச் சேர்ந்த  ரகுபதி (32) என்பவர், கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மகேஸ்வரி, 2 பெண் குழந்தைகள் உள்ள னர். இதற்கிடையே ரகுபதி வேலை செய்யும் நிறுவனத்தில் அட்டைப்பெட்டி செய்யும்  எந்திரத்தில் பழுது ஏற்பட்டு சில நேரங்க ளில் எந்திரம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விடுவதாக தெரிகிறது. இந்நிலை யில், வெள்ளியன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அப்போது ரகுபதி அட்டைப்பெட்டி எந்திரத்தை இயக்கி விட்டு அட்டைகளை நேர்த்தியாக அடுக்கி கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென எந்திரம் மேலிருந்து கீழ் நோக்கி வந்தது. அப்போது எந்திரத்தில் ரகுபதி சிக்கிக்  கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சிய டைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் ரகுபதி யின் உடலை மீட்க போராடினர். ஆனால், அதற்குள் ரகுபதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சூலூர் காவல் ஆய்வாளர் கார்த்திக் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை

திருப்பூர், ஜூன் 11- திருப்பூர், நாச்சிபாளையத்தில் அடுத்த டுத்து  2 வீடுகளில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. பல்லடத்தை, அடுத்த பொங்கலூர் அருகே உள்ள நாச்சிபாளையம், செந்தில் நகர் 5 ஆவது வீதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மனைவி லோகநாயகி (53).  இவர் கடந்த 8 ஆம் தேதி நாமக்கல்லில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். சனியன்று காலை திரும்பவும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்தி ருந்த இரண்டரை பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து, லோகநாயகி அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரி வித்தார்.  அதேபோல், அதே பகுதி 6 ஆவது வீதி யைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (38). பனி யன் நிறுவன தொழிலாளியான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது உறவி னர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர், சனியன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டி ருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த அரை கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை. இதுகுறித்து சந்தோஷ்குமார் அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித் தார். இரண்டு சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த அவினாசிபாளையம் போலீ சார் மேற்கொண்டு விசாரணை செய்து நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் கதவு உடைக்கப்பட்டு, திருட்டு நடைபெற்ற சம்பவம் நாச்சிபாளையம் பகு தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணிடம் வழிப்பறி -  போலீசார் விசாரணை

அவிநாசி, ஜூன் 11- அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில், பெண் ணிடம் முகவரி கேட்பது போல வந்து, 4 பவுன் தங்க நகை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் செட்டியார் பேட்டை, தமிழரசி நகர் பகு தியைச் சேர்ந்தவர் அரசு (59). இவரது மனைவி தாமரைச்  செல்வி (51). இவர்கள், தங்களது உறவினர்களுடன் ஊட்டி செல்வதற்காக அவிநாசி வழியாக வியாழனன்று இரவு வந்துள்ளனர். அவிநாசி அருகே ஆட்டையாம்பாளை யத்தில் சாப்பிடுவதற்காக, உணவகம் முன் நின்று கொண்டி ருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த இரு நபர்கள், முகவரி கேட்பது போல வந்து, தாமரைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்ப வம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடுகபட்டியில் நாளை மின் தடை

தாராபுரம், ஜூன் 11- வடுகபட்டியில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ் நாடு மின்சாரவாரியம், பல்லடம் மின்பகிர்மான வட்டம், தாராபுரம் கோட்டம், வடுகபட்டி 110/22 கே.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (திங்கட்கிழமை) 13 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. வடுகபட்டி, குமார பாளையம், எம்கேடிபாளையம், எஸ்பிகே பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

24 மணி நேரம் கடைகள் திறக்க அனுமதி     திருப்பூர் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர், ஜூன் 11- சர்வதேச பின்னலாடை சந்தை களில், அசைக்க முடியாத முக்கிய இடத்தில் திருப்பூர் மாநகரம் இருக்கி றது. திருப்பூர் மாவட்டத்தில் 21 மாநி லங்களை சேர்ந்த 2.20 லட்சம் பேர்  தொழில் நிமித்தமாக வசித்து வரு வதை கொரோனா கால கணக்கெடுப் பில் கண்டறியப்பட்டது. மேலும், தமிழ கத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்களும் வசித்து வருகின்ற னர். தமிழகத்தின் தூங்கா நகரமாக இருப்பது மதுரை. அதேபோல், பின்ன லாடை ஏற்றுமதி வர்த்தகமும், உள் நாட்டு பனியன் உற்பத்தியும் வேகமாக வளர்ச்சி பெற்ற போது திருப்பூர் நக ரமும்,தூங்கா நகரமாக மாறிக்  கொண்டிருந்தது. ஊரடங்கு வந்த பிறகு, நிலைமை தலைகீழாக மாறி விட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்சினைக் காக அனைத்து வகை கடைகளும், இரவு 11 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும் என்பது போலீசாரின் உத்த ரவு. அப்படியிருந்தும் 12 மணி வரை சில கடைகள் மறைமுகமாக இயங் கின.  அதிகாலை, 4 மணிக்கு ஓட்டல், பேக்கரிகள் திறக்கப்படுகின்றன. இடையே நான்கு மணி நேரம் மட்டுமே மூடப்படுகிறது. திருப்பூரில் வசிக்கும் வெளி மாவட்ட தொழிலாளர், தற்காலிகமாக வாடகை அறையில் தங்கி, ஓட்டலில் சாப்பிடுகின்றனர். பனியன் நிறுவனங்களில் 12 மணி வரை உற்பத்தி தொடர்ந்தால் அது வரை பேக்கரி - டீ கடைகளின் தேவை யும் இருக்கிறது. கடைகள் 11 மணிக்கு மூடப்படுவதால் பல வகையில் வெளி மாநில தொழிலாளர் பாதிக்கப்பட்ட னர். தமிழக அரசு மீண்டும் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. தொழிலா ளர் சமூக பாதுகாப்பு குறித்து தொழி லாளர் துறையும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு, தொழிலாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பணி முடிந்து தாமத மாக வெளியேறும் தொழிலாளர், உணவு, சிற்றுண்டி கிடைக்காமல் அவ திப்பட்டனர். அனைத்து கடைகளும் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டாலும், ஓட்டல், சிற்றுண்டி விற்கும் தள்ளுவண்டிகள், நடமாடும் டீக்கடைகள், பேக்கரிகள் மட்டுமே அதிக அளவு திறந்திருக்க வாய்ப்புள்ளது. இனி இரவு முழுவ தும் கடை இயங்கலாம் என்பதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

மாதர் சங்க உடுமலை தாலுகா  நகரம், ஒன்றியம் என இரண்டாக பிரிப்பு 

உடுமலை, ஜூன் 11- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உடுமலை மாநாடு சனியன்று உடுமலைப்பேட்டை ஸ்டாலின் நிலை யத்தில் நடைபெற்றது.  மாநாட்டுக் கொடியை மாலினி ஏற்றி வைத்தார். உடு மலை தலைவர் சுமதி தலைமை தாங்கினார். மாநாட்டை மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டதலைவர் மைதிலி துவக்கி வைத்து பேசினார். மாநாட்டை வாழ்த்தி வி.தொ.ச மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம், ஓய்வூதியர் சங்க செயலா ளர் பாலகிருஷ்ணன், சிஐடியு நிர்வாகிகள் எஸ்.ஜெகதீ சன், கி.கனகராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் மாதர் சங்கம் உடுமலை நகரம், உடுமலை ஒன்றியம் என இரண்டு கமிட்டிகளாக உருவாக்கப்பட்டது. உடுமலை நகர கமிட்டி தலைவராக சுமதி, நகர கமிட்டி செயலாளராக சித்ரா, பொருளாளராக வனிதா, துணை நிர்வாகிகளாக மாலினி, வசந்தி ஆகியோர் உட்பட 9 பேர்  கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.  உடுமலை ஒன்றிய கமிட்டிக்கு தலைவராக மேகலா, ஒன்றிய கமிட்டி செயலாளராக சித்ரா, பொருளாளராக சர்மிளா, துணை நிர்வாகிகளாக கஸ்தூரி, மாசிலாமணி மற்றும் மகேஸ்வரி, வான்மதி, மாரியம்மாள், செல்வி ஆகிய 9 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.  மாநாட்டை நிறைவுசெய்தும் புதிய நிர்வாகிகளை அறிமு கப்படுத்தியும் மாவட்ட துணைச் செயலாளர் பானுமதி நிறை வுரையாற்றினார்.மாநாட்டில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கேட்டும், சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிசட்டம் இயற்றக்கோரி யும், போதைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும், பணிஇடங்களில் பாதுகாப்புக் கோரியும் தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. நிறைவாக நகரச்செயலாளர் சித்ரா நன்றி கூறினார்.

புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

திருப்பூர், ஜூன் 11- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புகையிலை பொருட் கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட் கள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும், புகையிலை பொருட்களால் ஏற்படும் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி னாலும், புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஆங்காங்கே புகை யிலைப் பொருட்கள் குறித்து சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .அந்த வகையில், பல்லடம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முக நாதன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் முத்துப் பையன், தமிழ்ச்செல்வி மற்றும் சுகாதார அலுவலர்கள் பல்லடம் நகரப் பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும், பெட்டிக் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  இதில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த  9 கடைகளுக்கு தலா ரூ.100 வீதம் 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், புகையிலைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளை சீல் வைப்பது, மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

தொட்டியில் தவறி விழுந்து  குழந்தை பலி

அவிநாசி, ஜூன் 11- அவிநாசி அருகே பச் சாம்பாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் முத்துபழனி (45). இவரது மனைவி முத்துராம் (35). இவர்களது 3 வயது சிறுமி சஸ்மிதா, வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந் துள்ளார். பிறகு நீண்ட நேர மாகியும் காணாததால், அக் கம்பக்கத்தில் தேடி பார்த்த போது, வீட்டின் அருகே நடை பெற்று வந்த வீடு கட்டும் தண்ணீர் தொட்டிக்குள்  தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  திருப்பூர் மாவட்ட குழு இரண்டாக பிரிப்பு

திருப்பூர், ஜூன் 11- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் புறநகர் மாவட்டம் என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 5 ஆவது மாநாடு திருப்பூர் மாவட்ட கட்சி அலுவலக மான பீ.கே.ஆர் இல்லத்தில் சனிக்கிழமை அன்று நடை பெற்றது. மாநாட்டை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் நா.பெரியசாமி துவக்கி வைத்து பேசினார்.  திருப்பூர் மாவட்ட கட்சியின் முடிவின் அடிப்படையில் மேல் கமிட்டி ஒப்புதலுக்கு இணங்க திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் ஆகிய இரண்டு மாவட்ட அமைப்புகளாக செயல்படுத்துவது என்ற முடிவின் அடிப்படையில் கட்சியின் மாவட்டக்குழு மாநகர், புறநகர் ஆகிய இரண்டு மாவட்ட அமைப்புகளாக பிரிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்ட அமைப்புகளின் மாவட்ட குழு உறுப்பினர் கள் தனித் தனியாக கூடி நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.   அதன்படி மாநகர் மாவட்ட செயலாளராக எஸ்.ரவிச்சந்தி ரனின், துணைச் செயலாளராக, ஆர்.செந்தில்குமார், பொரு ளாளராக எஸ்.செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.  புறநகர் மாவட்ட செயலாளராக கே. எம்.இசாக், துணைச் செயலாளராக ஜி.ரவி, பொருளாளராக வி.பி.பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

தேனீக்கள் கொட்டியதில் 20 பேர் காயம்

சேலம், ஜூன் 11- தம்மம்பட்டி அருகே கோவில் விழாவின் போது, தேனீக் கள் கொட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப் பட்டி சிவன் கோவில் அருகே பெரியசாமி கோவில் உள் ளது. இந்த கோவிலில் சனியன்று வாழப்பாடியை அடுத் துள்ள துக்கியம்பாளையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட் டோர் வழிபட வந்தனர். கோவில் வளாகத்தில் உள்ள மரத்தடி யில், அடுப்பு வைத்து பொங்கல் வைக்க ஆயத்தமாகினர். அப்போது, எழுந்த புகையினால், மரத்திலிருந்த தேனீக்கள் கூட்டம் அங்கிருந்தவர்களை விரட்டி கொட்டியது, இதில், 20க்கும் மேற்பட்டவர்களுக்கு முகம், கைகளில் வீக்கம் மற்றும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த வர்கள் சிகிச்சைக்காக செந்தாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், வசந்தா (55) என்பவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புனரமைக்கப்பட்ட நூலகத்தில் அமைச்சர் ஆய்வு

நாமக்கல், ஜூன் 11- ராசிபுரம் ஊராட்சியில் புனரமைக்கப் பட்ட நூலத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் சனியன்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி  ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார் பில் அங்கன்வாடி மையம் அமைத்தல், பள்ளி கட்டிடம் அமைத்தல், சாலை பணி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத் தல், குடிநீர் இணைப்பு வழங்குதல், கழிவு நீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட  124 வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.8.25 கோடி  மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அரசம்பாளை யம் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற  அலுவலக கட்டிட பணிகளையும், ரூ.10 லட் சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அங் கன்வாடி மையம் கட்டிடப் பணிகளையும்,  ரூ.1.17 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட நூலகத்தையும் சுற்றுலாத்துறை அமைச் சர் மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   இதனைத்தொடர்ந்து மலையம்பட்டி ஊராட்சி பேருந்து நிறுத்தம் முதல் மலை யாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி  வரை தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.29.90 லட்சம் மதிப்பில்  புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணியி னையும் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். முன்னதாக, இந்த ஆய்வின் போது  ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலை வர் கே.பி.ஜெகநாதன், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா உட்பட பலர் உடனிருந்தனர்.

தீ விபத்து

சேலம், ஜூன் 11- சேலம் மாவட்டம், கெங் கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சிக்குட்பட்ட 5 ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த வர் கந்தசாமி (70). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு  விவசாய தோட்டத்துக்கு கூலி வேலைக்கு சென்றுள் ளார். இந்நிலையில், கந்த சாமியின் குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  இதுகுறித்து அக்கம் பக்கத் தினர் உடனடியாக கெங்க வல்லி தீயணைப்புத்து றைக்கு தகவல் தெரிவித்த னர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை அணைத்த னர். இவ்விபத்தில் வீட்டின் பீரோவிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்க நகை மற்றும் வீட்டின் உப யோகப் பொருட்கள் அனைத் தும் தீயில் கருகின. விபத்து குறித்து கெங்கவல்லி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.