districts

img

நிபா வைரஸ் காய்ச்சல் எதிரொலி சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

மேட்டுப்பாளையம், செப்.26- நிபா வைரஸ் பரவல் எதிரொலி யாக, கேரளம் மாநிலத்தில் இருந்து  தமிழகத்திற்குள் வருபவர்களை, சுகா தாரத்துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். கேரளம் மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கியிருந்தது உறுதி செய் யப்பட்டது. இதே போல் கேரளம் மாநி லத்தில் மேலும் சிலருக்கு நிபா வைரஸ்  தாக்கம் இருப்பதும் கண்டறியப்பட் டுள்ளது. இதனையடுத்து, கோவை மாவட்ட  சுகாதாரத்துறை சார்பில் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக தமிழக - கேர ளம் எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறை யினர் முகாமிட்டு சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, மேட்டுப் பாளையத்தில் உள்ள கேரள எல்லை  பகுதிகளான கோபனாரி, முள்ளி  சோதனை சாவடிகளில் வட்டார மருத் துவ அலுவலர்கள் மேற்பார்வையில் காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவர் பிரவீன் தலைமையில் சுகா தார ஆய்வாளர் ஹேமலதா,  ஒரு மருந்து வர் மற்றும் இரு செவிலியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர்  கொண்ட குழு தீவிர சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். சோதனையின் போது சம்பந்தப்பட்ட நபருக்கு காய்ச் சல் இருந்தால் உரிய சிகிச்சையளிப் பதோடு அவரது பயண விபரங்கள் முழு வதுமாக கண்காணிக்கப்பட உள்ளது. இதுகுறித்து சுகாதார துறையி னர் கூறுகையில், ‘தமிழகத்தில் தற் போது வரை நிபா வைரசால் பாதிப்பு  ஏதுமில்லை. இருந்தாலும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறை மூலம் கேரளம் எல்லையோர பகுதி சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளவில்  இருந்து தமிழகத்தினுள் வரும் மக்க ளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும்  அவர்களுக்கு உரிய மருந்து மாத்திரை கள் வழங்கப்படுவதோடு, அவர்களை தினந்தோறும் தொடர்பு கொண்டு  காய்ச்சல் உள்ளதா? அல்லது மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார் களா? என்ற விவரங்கள் பெறப்படும். இதனடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.