கோவை, நவ.1- தீபாவளியையொட்டி, கோவை நகரில் வெள்ளியன்று தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள் ளனர். தீபாவளியன்று பொதுமக்கள் பலரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் தீபாவ ளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி னர். கோவை நகரின் அனைத்து பகு திகளிலும் பட்டாசுகளை வெடித்த தால் அனைத்து சாலைகளிலும் பட் டாசு குப்பைகள், பலகார பாக்ஸ்கள் மலைபோல் குவிந்து கிடந்தது. இத னையடுத்து, கோவை மாநகரில் சேர்ந்துள்ள குப்பைகளை மாநக ராட்சி தூய்மைப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். மேலும், வரு கிற நவம்பர் 5 ஆம் தேதி தமிழக முதல் வர் கோவைக்கு வருகிற நிலையில், நகரை தூய்மைப்படுத்தும் பணியில் தற்காலி பணியாளர்களை கூடுத லாக நியமித்து குப்பைகளை அகற் றும் பணிகள் நடைபெற்று வருகின்ற னர். சேலம் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், பெரும்பாலான இடங்க ளில் வியாழனன்று அதிகாலை முதல் வெள்ளியன்று வரை பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர். இத னால், சாலைகள் தோறும் பட்டாசு குப்பைகள், பட்டாசு வைக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள், நெகிழி கழிவு கள் மலை போல் குவிந்துள்ளன. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அஸ்தம்பட்டி சூரமங்கலம் அம்மா பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தேங்கியிருந்த பட்டாசு குப்பை கள் நெகிழிகள் என அனைத்து வித மான குப்பைகளும் அகற்றும் பணி யில் மாநகராட்சி தூய்மைப் பணியா ளர்கள் வெள்ளியன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பட்டாசு கழிவுகளால் கழிவுநீர் கால் வாய், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் சேலம் மாநகராட்சி தூய் மைப் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடு பட்டு வருகின்றனர். வழக்கமாக மாநகராட்சி பகுதி களில் நாள் ஒன்றுக்கு சுமார் 150 டன் குப்பைகள் தேங்கும் இந்நிலை யில், தீபாவளிக்கு வெடித்த பட்டாசு குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் என இதுவரை 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் மொத்த மாக வெள்ளியன்று 250 டன் குப்பை கள் அகற்றப்பட்டுள்ளதாக மாநக ராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.