உதகை, பிப்.26- நீலகிரியில் கடும் வறட்சி காரணமாக வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் இருக்க சாலையோரங்களின் இருபுற மும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையி னர் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இதில் உதகை, கூடலூர் ஆகியவை வனக்கோட்டங்களாகவும், முது மலை புலிகள் காப்பகம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை தனித்தனியாக வனச்சரகர்கள், வன ஊழியர்க ளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக புலி, சிறுத்தை, யானை உள் ளிட்ட விலங்கினங்கள் மற்றும் அரிய வகை பறவையினங் கள் பல்வேறு உயிரினங்கள் என அனைத்து வகையான உயிரி னங்களும் வாழும் பல்லுயிர் சூழல் மண்டலமாக திகழ்கி றது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது இலை யுதிர் காலம் நிலவி வருவதால் வனப்பகுதிகளில் வறட்சி துவங்கியுள்ளது. இதில் குறிப்பாக முதுமலை புலிகள் காப்ப கத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் பகல் நேரங்களில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதியில் செடி கொடி கள் புற்கள் கருகியும், மரங்கள் காய்ந்தும் வனப்பகுதியில் கடும் வறட்சியானது நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனப்பகுதிகளில் உள்ள செயற்கை தண்ணீர் குட்டைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பகல் நேரத் தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதி களில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள சாலையோரம் இருபுறமும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதிக் குட்பட்ட மசினகுடியில் இருந்து உதகை செல்லும் சாலையில் உள்ள மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிக ளில் சாலையின் இரு புறமும் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என வனப் பணியாளர்கள் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது வறட்சி காலம் என்பதால் முதுமலை புலி கள் காப்பகம் வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங் கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி சமைக்கவோ அல் லது புகைப்பிடித்து வனப்பகுதிக்குள் வீசவோ கூடாது, மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.