தருமபுரி, பிப்.4- நல்லம்பள்ளி அருகே நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட் டம், பாளையம் சுங்கச்சாவடியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில், வாகன ஓட்டிகளுக் கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடை பெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்து பேசுகையில், பாளையம் சுங்கச்சாவடி வழியாக தினந்தோறும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையிலும், அவர்களின் உடல் ஆரோக்கித்தின் அவசியத்தினை உணர்த் தும் வகையிலும் இந்த ஒருங்கிணைந்த மருத் துவ முகாம் நடத்தப்படுகிறது. அனைத்து வாகன ஓட்டிகளும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். அதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கி லம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் அச்சிடப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை ஆட்சியர் வெளியிட் டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வரு வாய் அலுவலர் பால்பிரின்ஸி ராஜ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோ தரன், சேலம் திட்ட செயலாக்க அலகு துணை மேலாளர் திலீப் வர்மா, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தொழில்நுட்ப மேலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.