இன்சூரன்ஸ் மீதான பிரிமியத்திற்கு ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி இன்சூரன்ஸ் ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகிறது. இதன்ஒருபகுதியாக மேற்கண்ட கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பிட வேண்டும் என்கிற கோரிக்கை மனுவினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ராஜ்குமாரிடம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் அளித்தனர். இந்நிகழ்வில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் வி.சுரேஷ், கோட்ட பொதுச்செயலாளர் கே.துளசிதரன், பொருளாளர் பி.சுவாமிநாதன், கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.