கோவை, ஜூலை 5- கோவை மாநகராட்சி, 62 ஆவது வார்டுக்குட்பட்ட குடி யிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதா ரம் மற்றும் தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணை யாளர் மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சி, 62 ஆவது வார்டுக்குட்பட்ட நஞ் சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மு.பிர தாப், கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், போடப்படும் தடுப்பூசிகள், மருந்துமாத்திரைகளின் இருப்பு மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, நஞ்சுண்டாபுரம், காமராஜ் காலனியில் மக்கும், மக்காத குப் பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்கு வதையும், குடிநீர் விநியோகம் முறையாக உள்ளதா? மற்றும் தெருவிளக்குகள் எரிகிறதா? என்பது குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து அப்பகுதியி லுள்ள பொதுகழிப்பிடம் சுகாதாரமான முறையில் பராம ரிக்கப்படுகிறதா? என்பதை நேரில் ஆய்வு செய்து சுகாதார ஆய்வாளர்கள் முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தினார். முன்னதாக, இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர், நகர் நல அலுவலர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர் ரேவதி முரளி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரி கள் பலர் கலந்து கொண்டனர்.