சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் வலியுறுத்தல்
திருவள்ளூர், ஜூன் 2- கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி ஆகிய 3 இடங்களில் பரி சோதனை மையங்களை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இது ஜூன், ஜூலை மாதங்களில் மேலும் வேகமாக பரவும் என்கிறார் கள். இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிவது, பரிசோதனை செய் வது, தனிமைப்படுத்துவது போன்ற வற்றில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் எவ்வளவு நபர்களுக்கு பரிசோதனை செய்யப் பட்டது என்ற விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும். திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய மூன்று இடங்க ளில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. ஆனால் பரி சோதனை மையங்கள் அமைக்கப்பட வில்லை. மேற்கண்ட இடங்களில் தொற்று கண்டறியும் பரிசோதனை மையங்களை அமைக்க வேண்டும். தொற்று இருப்பவர்களை தனிமைப் படுத்தும் மையங்களை அதிகரிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை வளா கத்தில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளதால், இதர நோயாளிகள் அங்கு வர அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக பிற சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு, கொரோனா வார்டாக செயல்படுகிறது. கும்மிடிப் பூண்டி அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அரசு மருத்துவமனைக்கு வர அச்சப்படுகின்றனர். ஆகவே, கொரோனா வார்டுகளை தனியாக அமைக்கப்பட்ட வேண்டும். கிராமங்க ளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் மருத்துவர்கள், செவிலி யர்களை நியமித்தது 24-மணி நேர மும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பழவேற்காடு அருகில் உள்ள ஆண்டார்மடத்தில் உள்ள புயல் பாது காப்பு மையத்தை கொரோனா சிறப்பு வார்டாக பயன்படுத்தலாம். குடியிருப்புகள் இல்லாத பகுதி களில் கொரோனா வார்டுகளை அமைக்கலாம்.
திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டு களில் படுக்கை வசதிகள் இல்லாத தால் கர்ப்பிணி பெண்கள் தரையில் படுக்க வைக்கும் நிலை உள்ளதை சரிசெய்ய வேண்டும். ஜூன்-15 அன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு மையங்களை கிருமி நாசி னியை தெளித்து சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். உணவு, குடிநீர், போக்குவரத்து போன்றவற்றை அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும். மாணவர்களுக்கு சத்துணவை வழங்க வேண்டும். இந்தியாவில் கொரோனா தொற்று பரவலில் 11வது இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் உள்ளது. எனவே, மாவட்டத்தில் திறக்கப் பட்டுள்ள அரசு மதுபான கடை களை மூடவேண்டும், பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணிக்கு செல்லாதவர்க ளுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் சமூக மேம்பாட்டு நிதியை, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். பிரதமர் கேர்ஸ் நிதிக்கு அனுப்பக் கூடாது. இவ்வாறு அந்த கடிதல் கூறப் பட்டுள்ளது.