districts

img

வெல்ல ஆலைகளில் ஆய்வு தரமற்ற சர்க்கரை பறிமுதல்

நாமக்கல், மே 25- பரமத்திவேலூர் பகுதியில் உள்ள வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட னர்.  ஜேடர்பாளையம் பகுதியில், வெல்லம், நாட்டுச்சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு  செய்யப்பட்டது. இரண்டு நாட்களில் 21 ஆலைகள் தணிக்கை செய்யப்பட்டது. வெல்லம் பாகு தயாரிக்கும் இடம், பணியா ளர் சுத்தம்,  அஸ்கா சர்க்கரை இருப்பு, வேதிப்பொருட்கள் இருப்பு போன்றவை தணிக்கை செய்யப்பட்டது. இந்த  ஆய்வின் போது அஸ்கா சர்க்கரை மற்றும் வேதிப்பொருட் கள் கொண்டு நாட்டுச்சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு தர சட்டம், 2006-ன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், 38,310 கிலோ வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை மற்றும் 3725 கிலோ அஸ்கா சர்க் கரை, வேதிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13  உணவு மாதிரிகள் தணிக்கையின் பொழுது செயல்பட்ட ஆலைகளில் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட் டுள்ளது. ஆய்வு முடிவின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சம்பந்தப்பட்ட ஆலை உரிமை யாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.