districts

img

பணிநீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வலியுறுத்தல்கோயம்புத்தூர்

சேலம் ஏப்.17- பணிநீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை  பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியா ளர் சங்கத்தின் எடப்பாடி கோட்ட பேரவை கூட்டம், ஓமலூர் பகுதியில் சங்கத்தின் கோட்ட தலைவர் கலை வாணன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி தீர்மானத்தை கோட்ட இணை செயலாளர் மாரியப்பன் முன்மொழிந்தார். உட்கோட்ட செயலா ளர் கே.எம்.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். கோட்ட செயலாளர் தங்கராசு, கோட்ட தணிக்கையா ளர் லி.சித்துராஜ் ஆகியோர் வேலையைறிக்கையை சமர்பித்தனர். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சிங்கராயன், மாவட்ட தலை வர் என்.திருவரங்கன், மாவட்ட செயலாளர் சுரேஷ் உட் பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப் பணியாளர் பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு, தொழில் நுட்பக்கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணி யாளர்களின் பணிநீக்க காலத்திலும், பணிக்காலத்தி லும் உயிர்நீத்த அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய கோட்ட தலை வராக பெ.மாணிக்கம், கோட்ட செயலாளராக தா. கலைவாணன் அந்தோணி, கோட்ட பொருளாளராக கே.பழனிசாமி, துணைத்தலைவர்களாக ஆ.செல் வம், க.முருகேசன், இணைச் செயலாளர்களாக க.மாரி யப்பன், மா.கருப்பண்ணன், மு.தங்கராசு, மாநில செயற் குழு உறுப்பினர் சி.பச்சமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார்.