districts

img

திட்டப்பணிகளில் இடையூறு ஏற்பட்டால் உடனடியாக தீர்க்க வலியுறுத்தல்

திருப்பூர், செப்.26- மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்  குழு கூட்டத்தில் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் போது  இடையூறு ஏற்பட்டால், அவற்றை உடனடியாக சரி செய்ய  வலியுறுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புத னன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்கா ணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப் பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமை வகித் தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், ஈரோடு நாடா ளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வரசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் நோக்கம் ஒன்றிய,  மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும்போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்ப டுத்தப்பட்டு முறையான நிதிகள் சென்று சேர்வதையும், அதன்  பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் 44 துறை சார்ந்த  திட்டங்கள் சார்ந்த பணிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும்  ஊராட்சிகளுக்கு வரப்பெற்றுள்ள ஒன்றிய மற்றும் மாநில  அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, அதில் காலதா மதம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் குறித்தும், திட்டப்ப ணிகளை மேற்கொள்ளும் போது பணிகளுக்கு இடையூறு ஏற் படுமானால் அவற்றை உடனடியாக சரி செய்து தீர்வு கண்டு  பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் இக்கூட்டத் தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.         இக்கூட்டத்தில், மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர்  ரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, திருப்பூர் மாநகராட்சி இணை ஆணையர்கள் சுல்தானா, சுந்தரராஜன், திருப்பூர்  மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள் இல.பத்மநா பன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ்,  தாராபுரம் வருவாய்  கோட்டாட்சியர் செந்தில் அரசன், உள்ளாட்சி அமைப்புக ளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த  அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.