districts

img

ஓய்வூதியர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்களிக்க வலியுறுத்தல்

உடுமலை, டிச.3- ஓய்வூதியர்களுக்கு வருமான வரி யிலிருந்து விலக்களிக்க வேண்டும் என  தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று  கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து ஓய் வூதியர்களுக்கும் வருமான வரியிலி ருந்து விலக்களிக்க வேண்டும். புதிய  ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண் டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி, அனைவருக்கும் பணம் இல்லா மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற போக் குவரத்து தொழிலாளர்களுக்கு மருத் துவ காப்பீட்டு திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். போக்குவ ரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண் டிய 120 மாத அகவிலை படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.  கிராம உதவியாளர், சத்து ணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7.850 வழங்க வேண்டும். 70 வயதுக்கு மேல்  ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பத்து சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க  வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுத் துறை நிறுவனங்களின் ஓய்வூதியர் சங்க  கூட்டமைப்பின் தலைவர் செல்லத் துரை கண்டன உரையாற்றினார். போக் ்குவரத்து சங்கத்தின் காளிமுத்து, வடிவேல், சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் பாலசந்திரமூர்த்தி, ஆசிரி யர் சங்கத்தின் சுந்தர்ராஜ், மின்சார வாரி யத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.  திருப்பூர் அதேபோல் திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பள்ளி, கல் லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச் சங்க மாவட்ட துணைத் தலைவர் காளி முத்து தலைமை ஏற்றார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தணிக் கையாளர் பி.மகுடேஸ்வரன் வரவேற் றார். அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில  உதவிப் பொதுச் செயலாளர் பி.செல்வ ராஜ் தொடக்கி வைத்துப் பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம் பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநி லச் செயலாளர் அ.நிசார் அகமது நிறை வுரை ஆற்றினார். இதில் பெண் ஓய்வூ தியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட  ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.  மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருப்பூர் துணைத் தலை வர் ஆர்.நாகராஜ் நன்றி கூறினார்.