districts

img

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வலியுறுத்தல்

சேலம், டிச.26- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டு மென சேலம் மளிகை சில்லரை வியாபாரிகள் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. சேலம் மளிகை சில்லரை வியாபாரிகள் சங்க ஆண்டு பேரவை நடைபெற்றது. இதில், ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சள் பையை அறிமுகம் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரி விக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க  ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். குட்கா பொருட் கள் விற்பனையை தடுக்க மாநில எல்லைகளை காவல் துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.