districts

img

விவசாய தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, டிச.12- விவசாய தொழிலாளர் குடும்பங்க ளுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் ஈரோடு தாலுகா 3  ஆவது மாநாடு சித்தோடு சமுதாயக் கூடத்தில் கே.முருகன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் வி.இள ங்கோ ஏற்றி வைத்தார். மாவட்ட நிர்வாகி எஸ்.மாணிக்கம் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செய லாளர் பா.லலிதா, என்.கலாமணி, வாலி பர் சங்க தலைவர் பி.அன்பு ஜனாதிபதி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.  இம்மாநாட்டில், விலைவாசி உயர் விற்கேற்ப வீடு கட்டுவதற்கு அரசு ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும். பழைய வீடுகளைப் பராமரிக்க ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதி சட்டத்தில் 200 நாள் வேலை, ரூ.600 கூலி வழங்க வேண்டும். கிராமங்கள் தோறும் விவசாய தொழி லாளர்கள் நலவாரியத்தை செயல்ப டுத்த வேண்டும். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் அமைப்புகளை தடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஈரோடு தாலுகா தலைவராக எம்.நாச்சி முத்து, செயலாளராக நா.நாகராஜன், பொருளாளராக கே.நர்மதா, துணைத் தலைவராக கே.முருகன், துணைச்செ யலாளராக சி.பி.தங்கவேல் உட்பட 14 பேர் தாலுகாக்குழு தேர்வு செய்யப் பட்டது. இறுதியாக மாவட்ட செயலா ளர் ஆர்.விஜயராகவன் நிறைவு ரையாற்றினார்.