districts

img

தனியார் தொழிற்சாலைகள் பசுந்தேயிலையை கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

உதகை, டிச.9- நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனி யார் தேயிலை தொழிற்சாலைகளில் சிறு விவசாயிகள் வழங்கும் பசுந்தே யிலையை பெற்றுக்கொண்டு, குறைந்தபட்ச விலையாக ரூ.30 வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகி றது. விவசாயிகள் தங்களது தோட் டங்களில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலையை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலை களுக்கு வழங்கி வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கே விவசாயிகள் வழங்கி வருகின்றனர். தற்போது இவர்கள் வழங்கும் பசுந் தேயிலை தரமானதாக இல்லை என பல தொழிற்சாலைகள் வாங்க மறுப் பதாக கூறப்படுகிறது.

இதனால், சிறு விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. மேலும், தனியார் தேயிலை தொழிற்சாலைகள் போன்று கூட்டு றவு தேயிலை தொழிற்சாலைகளும் சிறு விவசாயிகள் அளிக்கும் தேயி லையை வாங்க மறுத்தால், விவசாயி களின் வாழ்வதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத் தில் உள்ள விவசாயிகள் வழங்கும் தேயிலையை அனைத்து தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் வாங்க வேண்டும். மேலும், பசுந் தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.30 வழங்க வேண்டும் என வலியுறுத்தி யும் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை படுகதேச பார்ட்டி நிறுவன தலைவர் மஞ்சை வி.மோகன், மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலை வர் தும்பூர் போஜன் ஆகியோர் தலை மையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து, நீலகிரி மாவட் டத்தில் உள்ள அனைத்து தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் விவ சாயிகள் அளிக்கும் பசுந்தேயி லையை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட னர்.