districts

img

வாய்க்கால்மேட்டுப் புதூர் சாலையை தரப்பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

திருப்பூர், நவ. 7 - வெள்ளகோவில் முத்தூர் சாலையில் வாய்க்கால் மேட்டுப்புதூர் பகுதியில் தரமில் லாமல் அமைக்கப்படும் சாலையை தரப்  பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என  அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ள னர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட் டத்திற்குட்பட்ட வெள்ளகோவில் முதல்  முத்தூர் செல்லும் சாலையில் வாய்க்கால் மேட்டுப்புதூர் அருகில் தார் சாலை அமைக் கப்பட்டு வருகிறது. மேற்படி தார் சாலை தர மற்ற முறையில் அமைக்கப்படுகிறது. சாலை  அமைக்கும் போதே ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகின்றன. இந்த இடத்தில் ஒப் பந்ததாரர் பெயர், சாலையின் தூரம் எவ்வ ளவு, ஒப்பந்த தொகை, பணியின் கால அளவு  குறித்த எந்த அறிவிப்புப் பலகையும் வைக்க வில்லை.  இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறி யாளர் ஆகியோரிடம் கேட்டாலும் பதில்  சொல்வதில்லை. இந்த பணி நடைபெறும் சாலை குறித்து தர பரிசோதனை செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத் துகின்றனர்.  இந்த சாலையை திருப்பூர் மாவட்ட ஆட்சி யர், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் நேரடி ஆய்வு செய்ய வேண்டும். தரமில்லாத சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மீது உரிய சட்ட நட வடிக்கை எடுப்பதுடன், தரமான சாலை அமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர்.