தருமபுரி, அக்.30- கம்பைநல்லூர் தலாவ் ஏரியில் உள்ள சீமை கரு வேல மரங்களை அகற்று மாறு விவசாயிகள் வலியு றுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் தலாவ் ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தாகும். கம்பைநல்லூர் ஏரிக்கு சனத்குமார் நதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் கம்பைநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள ஆயிரக்கணக் கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், கம்பைநல்லூா் நகர் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், கம்பைநல்லூா் தலாவ் ஏரியில் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், ஏரியில் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் அதிகளவில் குறைந்துள்ளன. பருவ மழைக் காலங்களில் ஏரியில் தேங்கும் தண்ணீரை சீமை கருவேல மரங்கள் உறிஞ்சு வதால் தலாவ் ஏரி வறண்டு காணப்படு கிறது. இதனால், கம்பைநல்லூர் சுற்று வட்டாரப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, பொதுப்பணித்துறை நிா்வாகம் சார்பில் கம்பைநல்லூர் தலாவ் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஏரியின் நீா்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென விவசாயிகள், பொது மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள் ளனர்.