தருமபுரி, ஜன.21- கம்பைநல்லுார் பேரூராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக விவசாய தொழிலாளர் சங்க தருமபுரி மாவட்ட செயலாளர் எம். முத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களுக்கும் வேலை வழங்க வேண்டும். சட்டப்படியான கூலி வழங்க வேண்டும். பல ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள சம்ப ளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணி தளத்தில் தொழிலாளர்களுக்கு தேவை யான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும். கொரோனா காலத்திலும், தொடர் பருவ மழையின் காரணமாக விவசாய கூலி தொழிலாளர்கள் வேலையின்றி வருமா னத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து உள்ளனர். எனவே, அவர்களின் குடும்பங்க ளுக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவா ரணம் வழங்க வேண்டும். மேலும், தருமபுரி கம்பைநல்லுார் பேரூராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத் தின் கீழ் வேலை வழங்குவதாக அரசு அறிவித்தும், இதுவரை வேலை வழங்க வில்லை. எனவே வேலை கிடைக்க உடனடி யாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.