districts

img

21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, ஆக.31- 21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் தரும புரி 8 ஆவது மாவட்ட பேரவைக் கூட்டம், அதியமான் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் சனி யன்று, சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் எம்.கார்த்திகேயன் வர வேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.பெரு மாள், மாவட்டப் பொருளாளர் கே. கேசவன் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்க மாநில இணைச்செயலாளர் கே.குப்புசாமி, மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜயன், பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில் சத்துணவு, அங் கன்வாடி, ஊர்புற நூலகர், வரு வாய் கிராம ஊழியர், ஊராட்சிச் செய லாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண் டும். தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில், 70 வயதான ஓய்வூதியர்களுக்கு வழங்கப்ப டும் ஓய்வூதியத்தினை 10 சதவிகி தம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்து, பழைய பென்சன் திட் டத்தை நிறைவேற்ற வேண்டும். கம்யூடேசன் பிடித்தம் செய்யும்  கால அளவை 15 ஆண்டுகளிலி ருந்து 12 ஆண்டுகளாக குறைக்க  வேண்டும். ஓய்வூதியர்கள் மரண முற்றால் ஈமச்சடங்கு மேற்கொள்ள ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். 21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அனைத்து ஓய் வூதியர்களும் பயன்பெறும் வகை யில், பணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை செயல் படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.இளமாறன் நிறைவுரையாற்றினார். இதைத் தொடர்ந்து சங்கத்தின் தருமபுரி  மாவட்ட துணைத்தலைவராக ஏ. சேகர், மாவட்ட தணிக்கையாளராக கே.புகழேந்தி ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். இதில் ஏராள மான ஓய்வூதியர்கள் கலந்து கொண் டனர். மாவட்ட இணைச்செயலாளர் கே.சின்னராஜ் நன்றி கூறினார்.