உடுமலை, மார்ச் 28- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வரவு செலவுகளை ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்து தணிக்கை செய்ய வேண்டும் என உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்ட்த்தில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங் கத்தின் கணக்குகளை தனிக்குழு அமைத்து தணிக்கை செய்ய வேண்டும். குடிமங்கலம் ஒன்றியத்தில் விருகல்பட்டி புதூர் கே.752 என்ற கூட்டுறவு வங்கியில் தொடர் முறைகேடு நடை பெற்று வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு பயர்கடன் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று தமிழ்நாடு விவ சாய சங்கத்தினர் கடந்த ஜன.12 ஆம் தேதி புகார் தெரி வித்ததையடுத்து, தான் கூட்டுறவு வங்கியில் முறைகேடுகள் நடைபெறுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுபோன்று அனைத்து வங்கிகளிலும் இதே நிலை தான். எனவே, அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
உடுமலை தாலுகா, உடுக்கம்பாளையம் பகுதியில் இணைப்பு சாலைகள் போட ஒப்பந்தம் எடுத்து ஒரு வருடம் ஆன நிலையில், தற்பொழுது வரை சாலைகளை போடாமல் உள்ளது. காலதாமதம் செய்யும் ஒப்பந்தகாரர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். செயற்கையாக குடிநீர் தட்டுபாடு ஏற்படுத்தும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் தனி யார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணியாளர் களை நியமனம் செய்ய வேண்டும். மேலும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு, இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற் படுகிறது. இதை முறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை விவசாயிகள் எழுப்பினர். இக்கூட்டத்தில், உடுமலை வட்டாட்சியர் கண்ணாமணி, மடத்துக்குளம் வட்டாட்சியர் செல்வி தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர். மதுசூதணன், உடுக்கம்பாளையம் பரமசிவம், பாலதண்டபாணி, ராஜகோபால், ஸ்ரீதர், அருண் பிரகாஷ் மற்றும் ஜல்லிபட்டி கோபால் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.