districts

img

பாஜக கொடியுடன் அவிநாசி கோவிலுக்குள் எல்.முருகன் தேர்தல் பிரச்சாரம்!

அவிநாசி, மார்ச் 24- தேர்தல் நடத்தை விதிமுறை களை மீறி, அவிநாசியிலுள்ள கோவிலுக்குள், பாஜக கொடி யுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நீல கிரி தொகுதி வேட்பாளர் எல். முரு கன் மீது தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவில் வழிபாட்டுத் தலங்க ளில் கட்சி சின்னங்களை பயன் படுத்தக்கூடாது. முழக்கம் எழுப்பு வது போன்ற நிகழ்வுகள் நடத்தக்  கூடாது என்பது தேர்தல் விதியா கும். ஆனால், நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்- ஒன்றிய இணை யமைச்சர் எல். முருகனும், பாஜக வினரும் தங்களது கட்சிக் கொடி யுடன் திருப்பூர் மாவட்டம், அவி நாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ் வரர் கோவிலுக்குள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எல்.முருகனை வரவேற்கும் விதத்தில் அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கோவில் வளாகத்தில் அமைந் துள்ள கலையரங்கில் “டிடிவி தின கரன் வாழ்க, வாசன் வாழ்க, வெற்றி  வேட்பாளர் வாழ்க” போன்ற முழக்  கங்களை எழுப்பியுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட கார்கள் கோவில் வளாகத்திற்கு உள்ளே  தாமரைச் சின்னத்துடன் வரிசை யாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 மேலும், பாஜகவின் கோவை வடக்கு மாவட்டத் தலைவர் சங் கீதா, கட்சி சின்னம் பொறித்த மோடி  அரசின் வளர்ச்சி என்ற தலைப்பி லான நோட்டீஸையும் கோவில்  வளாகத்திற்குள் விநியோகித்துள் ளார். எல். முருகன் சாமி தரிசனம்  செய்வதற்காக பொதுமக்களையும்  நீண்ட நேரம் கோவிலுக்கு வெளியே  போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.

 தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலில் இருக்கும் நிலையில், அதனை மீறி பாஜக வேட்பாளர் எல்.முருகன், கோவிலுக்குள் தங் கள் கட்சிக்கொடி, சின்னத்துடன் புகுந்துள்ளார். எனவே, அவர் மீது  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி ஊழல் :முருகன் மவுனம்

இதைத்தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் பத்திரிகை யாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அதிமுக நிர்வாகி  எஸ்.பி. வேலுமணியின் ஊழல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எல். முருகன், ‘பாஜக வளர்ச்சி அடைந்  துள்ளது’ என்று மட்டும் கூறிவிட்டு, அதிமுகவை விமர்சனம் செய்யா மல் பேட்டியை முடித்துக் கொண்டார்.