கோபி, ஜூன் 25– முடிவுற்ற திட்டப்பணிகளுக்கு கையோப்பமிட ரசீது வழங்க, வட்டார வளர்ச்சி அலுவலர் கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் அளித்த புகார்கள் குறித்து ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திங்களன்று விசாரணை மேற்கொண் டார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அயலூர், அளுக்குளி, கோட்டுப்புள்ளம்பா ளையம், மொடச்சூர், நாதிபாளையம் உள்ளிட்ட 21 ஊராட்சி கள் உள்ளன. இப்பகுதிகளில் அனைத்து கிராம மறுமலர்ச்சி, 15 ஆவது நிதிக்குழு மானிய திட்டம், மாவட்ட ஊராட்சி நிதிக்குழு திட்டம், பொதுநிதி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தார்கள் செய்து வருகின்றனர். திட்டப்பணிகள் முடிவடைந்தவுடன் ஒப்பந்ததாரர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ரசீது வழங்கப்பட்டு, தொகை செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஒப்பந்தம் கோரப்பட்ட பணிகளுக்கான உத்தரவு ஆணை வழங்கவும், முடிவுற்ற பணிகளுக்கு நிதியை பெற ரசீது வழங்க வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்பந்ததாரர்கள் கோரி வருகின்றனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர், ரசீதுக்கு கையொப்பமிட கமிஷன் கேட்பதாகவும், கமிஷன் வழங்க மறுத்தால் நிதி பெறுவதற் கான ரசீதுகளை நிறுத்தி வைப்பதாகவும், ஒப்பந்ததாரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அனுப்பினர். இதனையடுத்து கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அளித்துள்ள ஒப்பந்ததாரர்களின் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ் நியமிக்கப்பட்டார். அத னைத்தொடர்ந்து செவ்வாயன்று கோபிசெட்டிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீதான புகார் குறித்து முதலில் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட ஒப்பந்த்தார்களிடம் தனித்தனியாக ரமேஷ் விசா ரணை மேற்கொண்டார். ஒப்பந்ததாரர்களிடம் நடத்திய விசா ரணை அறிக்கை, ஒப்பந்ததாரர்கள் அளித்த புகார் மனுக்களை ஆகியவை ஆட்சியரிடம் சமர்பிக்கப்படும் என ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் தெரிவித்துள் ளார். கமிஷனுக்காக முடிவுற்ற பணிகளுக்கான கோப்புகளில் கையெழுத்திடாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது எழுந்த புகாரையடுத்து விசாரணை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.