திருப்பூர், மே 21- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக் கான புத்தாக்க பயிற்சி கொங்கு மெயின் ரோடு பகுதியிலுள்ள அமுதா நர்சரி பிரைமரி பள்ளியில் மே 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற் றது. இப்பயிற்சியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எளிய முறையில் கற்றல், கற்பித்தல் வழிமுறைகளை மொழித்திறன், கணி தம், அறிவியல் பரிசோதனை செயல் பாடுகள் மூலம் தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாநில பொதுச்செய லாளர் சுப்பிரமணி, மாநில கருத்தா ளர்கள் காத்தவராயன், தியாகராஜன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதன்பின் கொரோனாவால் மாண வர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெ ளியை சரிசெய்யும் வகையில், மாண வர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த செயல்பாடுகள் மூலம் கற் பிப்பது தற்போதைய சூழலில் அவ சியமாக இருக்கின்றது என்பதை சுப்பி ரமணி வலியுறுத்தி கூறினார். முன்ன தாக இந்நிகழ்வில் ஆசிரியர்கள், இல் லம் தேடி கல்வி திட்ட தன்னார்வ லர்கள் என 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.