திருப்பூர், பிப்.23 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி யில் 15வது நிதிக்குழு மானியம் மற்றும் பொது நிதி ஆகியவற்றில் ரூபாய் 34 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பதினைந்தாவது நிதி குழு மானியம் 22- 23, 23 - 24 ஆம் ஆண்டிற்கான நிதியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இடுவாயின் வடக்கு பகுதியில் சீராணம்பாளையம் சாலையில் கிழக்கு பகுதி யில் முருகன் வீடு முதல் இடுவம்பாளையம் சாலையில் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே உள்ள மயானம் வரையும், பெரு மாள் கோயில் முதல் தியாகி இரத்தினசாமி நிலையம் வரையும் கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், ஊராட்சி பொது நிதியில் இடுவாயின் தெற்கு பகுதியில் டி.கே. மளிகை முதல் மௌனசாமி வீடு வரை காங்கிரீட் சாலைகள் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பழுது சரி செய்ய வும், இடுவாய் வடக்கு பகுதியில் உள்ள ஏடி காலனியில் நான்கு வீதிகளில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் பழுது சரி செய்ய வும், கனிமவள நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஏடி காலனியின் வடக்கு பகுதியில் சின்னான் வீடு முதல் ராயல் அவென்யூ ரோடு வரை கான்கிரீட் சாலை அமைக்கவும், இடுவாய் தெற்கு பகுதியில் ரேஷன் கடை எதிர்ப்புறம் சொக்கப்பண்ணன் வீடு முதல் சி.எம். முத்து வீடு வரை ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலையும் ஆக மொத்தம் சுமார் ரூ.34 லட்சம் மதிப்பில் நடைபெறும் திட்ட வேலைகள் துவங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் தலைமையில், ஊராட்சி மன்ற துணைத் தலை வர் எஸ். பரமசிவம் முன்னிலையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில், ஊராட்சி செயலாளர் கே.ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்.ஈஸ்வரி, பி.ஈஸ்வரி, சுப்பிரமணி ஆகியோர் பங்கேற் றனர். ஊர் பெருந்தனக்காரர் குமாரசாமி, ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும், நில வள வங்கி முன்னாள் இயக்குனருமான கே. ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுவாய் வடக்கு கிளை செயலாளர் கே. கருப்புசாமி மற்றும் கட்சியின் முன்னணி ஊழி யர்கள் சீராணம்பாளையம் முருகேசன், தீக் கதிர் பழனிசாமி, லட்சுமணன், ஒப்பந்ததாரர் முத்துவேல் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.