மேட்டுப்பாளையம், டிச.2- மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.3.21 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய பணி களை ஆ.ராசா எம்பி., துவக்கி வைத்தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிறன்று நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினறும், திமுக துணை பொதுச்செயலா ளருமான ஆ.ராசா ரூ.3.21 கோடி மதிப்பில் முடிவுற்ற பணி களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும் மற் றும் புதிய வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அந்த வகையில் மேட்டுப்பாளையம் நகராட்சிக் குட்பட்ட மாதையன் லே-அவுட் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப் பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு, ரூ.5 லட்சம் மதிப் பில் பாரதி நகர் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக் கும் பணிகளையும் அவர் துவக்கி வைத்தார். இதை போன்று, மருதூர் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பில் புதிய பால் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிகளை யும் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில், திமுக கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முக சுந்தரம், அஷ்ரப் அலி, மேட்டுப்பாளையம் நகராட்சித் தலை வர் மெஹரீபா பர்வீன், காரமடை நகராட்சித் தலைவர் உஷா வெங்கடேஷ், கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.