இளம்பிள்ளை, பிப்.8- திமுகவின் சேலம் நாடாளுமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியால் சேலம் - சென்னை நிரந்தர விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப் படும் என ஒன்றிய அமைச்சர் ஜோதி ராதித்யா எம்.சிந்தியா தெரிவித்துள் ளார். சேலத்திலிருந்து பல்வேறு மாநி லங்களுக்கு வர்த்தக ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சென்று வருவ தற்கு விமான சேவை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும் என சேலம் மாவட்ட பொதுமக்கள், கல்வியாளர் கள், தொழில் முனைவோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த னர். இதுதொடர்பாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் நேரிலும், மக்களவையிலும் திமுக வைச் சேர்ந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும், டிச.8 ஆம் தேதியன்று நாடாளுமன் றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எஸ்.ஆர்.பார்த்திபன் இந்த கோரிக்கையை எழுப்பினார். அப் போது, அதற்கு பதிலளித்த ஒன்றிய விமானசேவை துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியா, விரை வில் நிரந்தரமாக சேலம் விமான சேவை தொடங்கப்படும் என்று பதில ளித்தார். இந்நிலையில், எதிர்வரும் மார்ச் முதல் சேலம் - சென்னை விமான சேவை தொடங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந் தியா தற்போது கடிதம் மூலமாக தெரி வித்துள்ளார். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.,யின் தொடர் முயற்சியால் கிடைத்த பலனுக்கு பலரும் பாராட்டு களை தெரிவித்து வருகின்றனர்.