தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
திருப்பூர், ஜூன் 10- தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றம் தன்னார்வலர்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற் றது.
பருமன், பதற்றம், இதய நோய், ரத்தக் குழாய் அடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் தொற்றா நோய்கள் என அறியப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வ தன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றம் தன்னார்வலர்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இந்த 21 கிலோ மீட்டர் சைக்கிள் பேர ணியை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் டி.ராஜலட் சுமி தொடங்கி வைத்தார். 150 பேர் பங்கேற்ற சைக்கிள் பேரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலை யம், புஷ்பகிரி வேலாயுத சுவாமி கோயில், வள்ளியிரச் சல், வேப்பம்பாளையம், உப்புப்பாளையம், பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணி மீண்டும் சுகாதார நிலையத்தை வந்தடைந்தது. இந்த பேரணியில், தொற்றா நோய்களை முறையான உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்த முடியுமென வலியுறுத்தப்பட்டது. இதில் பெரம்பலூரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி இளைஞா் கலைச்செல்வன் பங்கேற்று சிறப்பித் தார்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குகளுக்கு தீர்வு
அவிநாசி, ஜூன் 10- அவிநாசியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குக ளுக்கு தீர்வு காணப்பட்டது.
நிலுவையில் உள்ள வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதற்காக லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் அவிநாசி சார்பு நீதிமன்ற வளாகத்தில் சனிக் கிழமை நடைபெற்றது. இம்மக்கள் நீதிமன்றத்துக்கு, சார்பு நீதிபதி எஸ்.இந்துலதா தலைமை வகித்தார். மாவட்ட உரிமை யியல் நீதிபதி எஸ்.வடிவேல், மாவட்ட ஓய்வு நீதிபதி ராம்ராஜ், வழக்குரைஞர்கள் ஆர்.பி.கனராஜ், இளங்கோவன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன விபத்து வழக்கு, சொத்துத் தொடர்பான சிவில் வழக்கு, காசோலை மோசடி வழக்கு, சொத்து வரி மேல் முறையீட்டு வழக்கு, வாரா கடன் வழக்கு என மொத்தம் 261 வழக்குகள் சமரச தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. இதில், மொத்தம் ரூ.1 கோடியே 96 லட்சத்து 656 மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணபட்டது. இதில் அரசு, தனியார் காப்பீட்டு அலுவலர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், வழக்குகளில் தொடர் புடையோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பெருமா நல்லூர் அருகே மரியபுரத்தைச் சேர்ந்த தினேஷ் சாலை விபத் தில் உயிரிழந்ததையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை காப்பீட்டு நிறுவனம் மூலம் வழங் கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக வழக்குரைஞர்கள் திரு மூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோர் ஆஜராகினர். இதேபோல சாலை விபத்து வழக்கில் பிரபு கணேஷ் என்பவருக்கு ரூ.62 லட்சம் காப்பீட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.
திறன் மேம்பாட்டுப் போட்டிகள்
திருப்பூர், ஜூன் 10 - வெள்ளக்கோவிலில் புத் தகத் திருவிழாவை முன்னிட்டு திறன் மேம்பாட்டுப் போட்டி கள் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றன.
வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் சீரங்கராயகவுண்டன்வலசு சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் ஜூன் 28 ஆம் தேதி முதல் ஐந்து நாள்க ளுக்கு புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக வாசிப்பு பழக் கம், புத்தகங்களின் நன்மை கள் குறித்து இளம் தலை முறையினருடன் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் வெள்ளக்கோவில் புனித அமல அன்னை பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 85 மாணவர் கள், 65 மாணவிகள் பங் கேற்றனர்.