திருப்பூர், ஜன.2- தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் திருப்பூ ரின் முக்கிய சாலைகள் குண்டும், குழி யுமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். தொழிலாளர்கள் நிறைந்த தொழில் நகரமான திருப்பூரில் வாகன பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளன. ஆனால் அதற்கேற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. பி.என் சாலை, மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, பூலுவப் பட்டி ரிங் சாலை என பல சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அவ்வபோது ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் வரும் போது மட்டும், அவர் எந்த சாலை வழியாக வருவாரோ அந்த சாலை மட்டும் அவசர அவசர மாக சீரமைக்கப்படுகிறது. அதுவும் சில நாட்களில் பழையபடி குழியாகி விடுகி றது. மேலும், பல சாலைகளில் பாதாள சாக்கடை, எரிவாயு குழாய்கள் பதிப்பு, குடிநீர் குழாய் பதிப்பு உள்ளிட்டவை களுக்காக தோண்டப்படும் சாலைக ளும் முறையாக மூடப்படாமல் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், தொழில் நகரமான திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மற் றும் அதன் சார்பு தொழில்களுக்கு தேவையான பொருட்களைக் பல ஆயி ரம் வாகனங்கள் தினசரி கொண்டு வரு கின்றன. மேலும், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என வாகனங்களை பயன்படுத்துபவர்க ளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. ஆனால் வாகனங்க ளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சாலை களின் கட்டமைப்பு வலுவாக இல்லை. இதனால் காலை மற்றும் இரவு நேரங்க ளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின் றன. மேலும், வாகன ஓட்டிகள் விபத்துக ளில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. பாதாள சாக்கடை, குழாய் பதிப்பு உள் ளிட்ட சீரமைப்பு பணிகளுக்காக தோண்டபடும் குழிகள் மூடப்பட்டு, சாலைகளை முழுமையாக சீரமைக் கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங் களில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளும் அதிக அளவில் ஏற்படுகி றது. நெடுஞ்சாலை துறையினர் இதன் மீது கவனம் செலுத்தி உடனடியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை களில் உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.