மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் அலுவலகப்பணி நாட்களில்பெற்றுக்கொள்ளலாம்
உதகை, நவ.11- மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள், 90 நாட்களுக்குள் அலுவலகப்பணி நாட்களில் பெற்றுக்கொள்ள லாம் என நீலகிரி அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் ரா.ச.சு. குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்ட எல்லைக்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில், மார்ச் 2019 முதல் செப்டம்பர்2020 வரையிலான பருவங்களில் 10 ஆம் வகுப்பு மற்றும் மேல் நிலைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்க ளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இத்தேர்வு மையங்கள் மூலமாக நேரடியாக மதிப்பெண்சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன. அவ்வாறு மதிப்பெண் சான்றிதழ் களை பெறாத தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ் கள், இந்த அலுவலகத்தில் மீள் பெறப்பட்டுள்ளன. அதன்படி, நீலகிரி மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவல கத்தில் மார்ச் 2019 முதல் செப்டம்பர் 2020 பருவங்களுக்கு ரிய மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப் பத்துடன் இணைத்து அனுப்பி தேர்வரால் பெறப்படாமலி ருக்கும் சான்றிதழ்கள் உள்ளன. தேர்வுத் துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண்சான்றிதழ்கள் அனைத்தும் அழிக் கப்பட வேண்டும். எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள், 90 நாட்களுக்குள் அலுவல கப்பணி நாட்களில் பெற வேண்டும். இதனை நேரிலோ அல்லது ரூ.45 அஞ்சல் வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப் பட்ட உறையுடன், உதகை கூட்ஷெட்டில் உள்ள உதவி இயக்குநர், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர்அலுவலகம் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ள வேண்டும். தவ றினால், மேற்படி தேர்வு. பருவங்களுக்கான மதிப் பெண்சான்றிதழ்களை அழிப்பதற்கான நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி மாணவனுக்கு அரசுப்பள்ளி பாராட்டு
அவிநாசி, நவ.11 அவினாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்கு பள்ளி நிர்வாகம் சார் பில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். கோவா மாநிலத்தில், தேசிய அளவிலான மாற்றுத் திறனா ளிகளுக்கான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டி களில் 100, 50, பின்புறமாக நீச்சல் அடிப்பது உள்ளிட்ட மூன்று போட்டிகளில் திருப்பூர் மாவட்டம், பழங்கரை ஊராட்சி, அவி நாசிலிங்கம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள் ளியைச் சேர்ந்த ஆர்.சபரிஆனந்த் (7 ஆம் வகுப்பு) மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். இவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி, ஊராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கோபால் உள்ளிட்டோர் பொன்னாடை அணி வித்து, நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளை தெரி வித்தனர்.
சிறுவன் மீது பொய் வழக்கு பதிந்த ரோந்து காவலர்களை கைது செய்யக் கோரிக்கை
திருப்பூர், நவ.11 - திருப்பூர் கோவில் வழி கார்த்திக் நகரை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இளங்கோ (19), மாதேஷ் (17), ரோஹித் (15) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த கவிதா, பட்டியல் சமூக மக்களுக்காக பொதுப்பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஐந்தாம் தேதி இவரது உறவினர் அம்மாசை (80) என்ற மூதாட்டி உடல் நலக்கு றைவினால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்து விட்டார். இவரது இறப்பு குறித்து கவிதா மற்றும் மகன்கள் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து விட்டு இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினர். சீதா கம்பெனி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ தங்கவேல் மற்றும் நான்கு காவலர்கள், மாதேஷ், ரோஹித் இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். இவர்களது சாதியை கேட்டுள்ளனர். இவர்கள் பட்டியல் சாதி யைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னவுடன் காவலர்கள், ரோஹித்தை அனுப்பிவிட்டு, மாதேஷிடம் வெள்ளை தாளில் மிரட்டி கையெழுத்து, கைரேகை பெற்றனர். பின்னர் நல்லூர் காவல் நிலையத்தில் ரோஹித் மீது வழக்குப்பதிவு செய்துள்ள னர். வழக்கு எண் 915/2024இல் இரண்டாவது குற்றவாளி யாக ரோகஹித் பெயரை பதிவு செய்து உளளனர். அதில் ரோஹித்துக்கு வயது 18 என்று குறித்துள்ளனர். இளவர் என்று பார்க்காமல், பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என ரோஹித் மீது வழக்கு பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளர் தங்கவேல் மற்றும் நான்கு காவலர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறாக பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.மேலும் ரோஹித்தை நல்லூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததாக அவர் கள் குறிப்பிட்டுள்ளதால், அங்கிருக்கும் அனைத்து கண்கா ணிப்பு கேமரா பதிவுகளையும் பாதுகாப்பாக வைக்க ஆவண செய்ய வேண்டும் என்று தாயார் கவிதா மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்திருக்கிறார்.
புதிய பள்ளி கட்டிடங்கள்: அமைச்சர் திறந்து வைப்பு
கோவை, நவ.11- கவுண்டம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடங்களை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்க ளன்று திறந்து வைத்தார் கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 413 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப் பள்ளியை மார்ட்டின் குழுமம் 7 கோடி ரூபாய் செலவில் புனரமைத்து புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், நூல கம், ஸ்மார்ட் வகுப்பறைகள், நுழைவு வாயில், விளையாட்டு மைதானம், கலையரங்கம் உள்ளிட்டவைகளை கட்டி தந்துள்ளனர். மேலும், பள்ளி வளாகங்களில் சிசிடிவி, வகுப் பறைகளில் மேசை நாற்காலிகள், சுற்றிலும் மரக்கன்றுகள் என பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். அதன் திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. பள்ளியில் கட்டப்பட் டுள்ள புதிய பள்ளி கட்டிடங்களை தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வகுப்பறைகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகர மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணை யாளர் சிவகுரு பிரபாகரன், மாட்டின் குழும இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின், நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், திரைப்பட நடிகர் ஆரி மற்றும் அரசு அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
பொய் வழக்கு - மார்க்சிஸ்ட் கட்சியினர் விடுதலை
திருப்பூர், நவ.11 – உயர்மின் கோபுர எதிர்ப்புப் போராட் டத்திற்குச் சென்ற சிபிஎம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணனை தடுத் ததைக் கண்டித்து, தாராபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது போலீசார் புனைந்த பொய்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல்லடம் வட்டம் கள்ளிப்பாளை யத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம் பர் மாதம் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கக் கூடாது என்று, விவசாய சங் கங்களின் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை வாழ்த்தி பேசுவதற்காக 2018 டிசம்பர் 29 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வருகை தந்தார். அவரை போராட்டத் திடலுக்குச் செல்லவிடா மல் முன்கூட்டியே போலீசார் தடுக்க முற்பட்டனர். இந்த தகவலை அறிந்து, தாரா புரம் நகரத்தில் 2018ஆம் டிசம்பர் 29 அன்று மாலை 5 மணிக்கு அண்ணா சிலை முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரை யும் தாராபுரம் காவல் துரையினர் கைது செய்தனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் 21 பேர் மீது வழக் குப் பதிவு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டப்படி நடைபெற்ற போராட் டத்தின் நியாயத்தை வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் ஆகியோரி டம் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் காவல் துறை வழக்கை வாபஸ் பெறவில்லை. வழக்கு நீதிமன்றத்துக் குச் சென்றது. 21 பேர் வழக்கில் சேர்க் கப்பட்டனர் நான்கு பேர் மரணம் அடைந்து விட்டனர். மீதி 17 பேருக்கு இன்றைய தினம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. அன்றைய அதிமுக அரசாங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கள் மீது பொய் வழக்குப் போட்டது. அதை எதிர்த்து ஐந்தாண்டு கால மாக வழக்கு நடத்தி இன்று நீதிமன் றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட் டது. எனவே உரிமைக்கான போராட் டங்களை தாராபுரம் வட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக நடத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கன கராஜ் கூறியுள்ளார்.