districts

img

மலேசியா சிலம்பம் போட்டி: இந்திய மாணவர்கள் வெற்றி

சென்னை, ஆக. 30- மலேசியா கோலாலம்பூரில் ஆகஸ்ட் 26, 27 தேதிகளில் மலேசியா போர்க்கலை சிலம்பம் அமைப்பு சார்பில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் ஒரு மாணவருக்கு தனித்திறமை மற்றும் தொடு முறை போட்டிகள் என இரண்டு விதமான போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த சிலம்ப ஆசான் சண்முகம் தலைமையில் திருவொற்றியூர் யுத்த வர்ம சிலம்ப போர்க்கலை அகாடமி சிலம்பப் பள்ளியின் 19 மாணவர்களும் 3 மாணவிகளும் என மொத்தம் 22 பேர் 44 போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் ஆறு மாணவ, மாணவிகள் 18 தங்கம் , 17 வெள்ளி , 3 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இந்த போட்டியில் மலேசியா சாம்பியன் பட்டம் வென்றது.  இந்தியா 2ஆவது இடத்தை பெற்றது. இந்திய அணியில் இடம் பெற்ற திருவொற்றியூரைச் சேர்ந்த  மாணவர்களுக்கு மண்டலக் குழு தலைவர்  தனியரசு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இதில் சங்கத்தின் தலைவர் சுரேஷ், செயலாளர் ஆசான் சண்முகம், பொருளாளர் அனுராதா, மேலாளர் கிஷோர், இணைச் செயலாளர் பாஸ்கராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.