districts

சுய ஆதாயத்திற்காக நடத்தப்படும் சிண்டிகேட் தேர்தல் சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு

இந்திய மாணவர் சங்கம் இன்று போராட்டம் ஊழல் கறைபடிந்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், துணைவேந்தரும், பதிவாளரும் செவ்வாயன்று (இன்று) நடத்தும் ஆட்சிப்பேரவைக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெறும் செவ்வாயன்று (இன்று) பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களைத் திரட்டி பெருந்திரளான போராட்டம் நடைபெற உள்ளதென இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எம்.அருண்குமார், மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சேலம், பிப்.12- சுய ஆதாயம் அடையும் வகையில் நடத் தப்பட உள்ள சிண்டிகேட் தேர்தலை தமிழ் நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என  சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரி யர்கள், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்க ஆட்சிமன்ற (சிண்டிகேட்) மற்றும் ஆட் சிப்பேரவை (செனட்) குழுக்கள் உள்ளன. இதில், சிண்டிகேட்டை பொறுத்தவரை இணைவுபெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சார்பில், 2 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். சேலம் உட்பட 4  மாவட்ட கல்லூரிகளைச் சேர்ந்த செனட்  உறுப்பினர்கள், தேர்தல் மூலம் இந்த 2 பிர திநிதிகளையும் தேர்வு செய்வார்கள். ஒரே நேரத்தில் இந்த இரு பொறுப்புகளுக்கும் தேர் தல் நடத்தும்போது, வாக்குகளின் எண் ணிக்கை அடிப்படையில் அரசு, அரசு உத விபெறும் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் சிண்டிகேட்டில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்ப டும். இதனிடையே, சிண்டிகேட் உறுப்பின ராக இருந்த பேராசிரியர் ஒருவர் பணியில் இருந்து விலகினார். இதனால், அந்த பொறுப்பு காலியாக உள்ளது. அதேசமயம், மற்றொரு சிண்டிகேட் பொறுப்பிற்கு இன் னும் 6 மாதம் மட்டுமே பதவிக்காலம் உள் ளது. இந்நிலையில், காலியாக உள்ள ஒரு  சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பிற்கு மட் டும், செவ்வாயன்று (இன்று) தேர்தல் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,  வாக்குகள் அடிப்படையில் அரசு மற்றும்  உதவிபெறும் கல்லூரியைச் சேர்ந்தவர்க ளுக்கான பிரதிநிதித்துவம் பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு வேண் டியவர்களை சிண்டிகேட் உறுப்பினர்க ளாக்கி கொள்வதற்காக, பல்கலைக்கழக நிர் வாகம் மேற்கொள்ளும் திட்டமிட்ட பாரபட்ச மான நடவடிக்கை என குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இதுதொடர்பாக, பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர் ஒருங்கிணைப்பு குழுவின்  ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ், உயர் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, பெரி யார் பல்கலைக்கழக செனட் கூட்டம் செவ்வா யன்று (இன்று) நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அன்றைய தினமே ஆட்சிமன்ற,  ஆசிரியர் தொகுதியில் ஏற்பட்ட காலியிடத் திற்கான தேர்தலும் நடைபெறும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்ற குழுவின்  காலம் முடியும் தருவாயில், உள்நோக்கத் தோடு ஆசிரியர் தொகுதியில் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்ப நிர்வாகம் முயற்சிக்கி றது. இது இடைக்காலத்திற்கான தேர்தலாக  நடத்தப்படாமல், முழுமையான காலத்திற்கு  இப்படி தனித்தனியாக தேர்தல் நடத்தும் போது, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் சுயஆதா யம் அடைவதற்கு வழி வகுக்கும். குறிப்பாக,  அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள், இத்தேர்தலில் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதே நோக்கமாக உள்ளது. எனவே, அரசு தலையிட்டு இத்தேர் தலை தடைசெய்து, உரிய விசாரணை நடத்தி  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.