districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 43 ஆவது அமைப்பு தின விழா

திருப்பூர், நவ. 3 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  43ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  கொடியேற்று விழா நடைபெற்றது. எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்ற முழக்கத்துடன் செயல்படும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்   அமைப்பு தினம் நவ.3 ஆம் தேதியாகும். இதை யொட்டி திருப்பூர் மாவட்டத்தில் வாலிபர் சங் கத்தினர் உடுமலை ஒன்றியம் மருள்பட்டி, கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை, ஜல்லி பட்டி, தளி, கொடிங்கியம், சாலையூர் பகுதிக ளில் கொடியேற்று விழா நடைபெற்றது. வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய தலை வர் ஆ.ராமசாமி தலைமையில், ஒன்றிய செய லாளர் சு.தமிழ்த்தென்றல், கமிட்டி உறுப்பி னர்கள் த.லோகேஸ்வரன், வி.நித்தீஷ், சி. கருப்புசாமி, சி.மாசானி, ஜல்லிபட்டி அஜித் குமார், வி.கே.புரம் லோகமுருகன் உள்ளிட்ட பங்கேற்று உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் கி.கனகராஜ், விவசாயிகள் சங்கச் செய லாளர் ஏ.பாலதண்டபாணி, விதொச செய லாளர் எம்.ரங்கராஜ் உள்ளிட்டோர் வாழ்த்திப்  பேசினர். நிறைவாக பிரபு ராம் நன்றி கூறி னார். அதேபோல் வடக்கு ஒன்றியம் குருவாயூ ரப்பன் பகுதியில் கொடி ஏற்றி வைக்கப்பட் டது. இதில் கிளை நிர்வாகி செந்தில், ஒன்றியக்  குழு உறுப்பினர் ராஜசேகர், ஒன்றிய தலைவர்  ரேவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வாலிபர் சங்கத்தின் கொடியேற்றி உறுதி மொழி ஏற்று அமைப்பு தினம் கொண்டா டப்பட்டது.