districts

img

இந்திய விமானப்படை வாகன கண்காட்சி

கோவை, ஜூலை 11- இந்திய விமானப்படை திஷா என்ற பெயரில் விமா னங்கள் இயக்கப்படுவது தொடர்பான கண்காட்சி ஏஐ தொழில் நுட்பம் மூலம் இயங் கும் செயற்கை விமானத்தை கோவையில் மாணவர்கள் ஆர்வத்துடன் இயக்கி பார்த் தனர். இந்திய விமானப்படை வாகனம் “திஷ்ஷா” 2015 முதல் விமானப்படையில் இளைஞர் கள் இணைவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் பயணிக்கிறது. அவ்வ கையில் சூலூர் விமானப் படைத்தளம் சார் பாக ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரி யில் வியாழனன்று கண்காட்சி நடைபெற்றது.  இவ்வாகனத்தில் விமானப்படை குறித்த பல் வேறு பொருட்கள் காட்சிப்படுத்துதப்பட்டு, திரை வழியாக ஏஐ தொழில் நுட்பம் மூலம்  விமானத்தை இயக்குதல், அதுகுறித்த செயல்பாடுகளும் விளக்கப்பட்டது. எட்டு பேர் கொண்ட விமானப் படையினர் இந்த  “திஷ்ஷா” குழுவில் இடம்பெற்ற கண்காட் சியை பார்வையிட வரும் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.