புதுதில்லி,ஜூன் 01- கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகின் மோசமான ஏழாவது நாடாக இந்தியா உள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகி யுள்ளன. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,90,535 ஆகும் உலக சுகாதார அமைப்பின் கொரோனா டிராக்கரின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் வழக்குகளின் பாதிப்புகளின் அடிப்படையில் 1,82,143 எண்ணிக்கையுடன் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி இந்தியா வில் மொத்தம் 38,37,207 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டு ள்ளன, அவற்றில் 1 லட்சத்து 180 மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன.