districts

img

இந்தியா கூட்டணி 350 இடங்களை பெறும்!

விழித்து எழும் இளைஞர் கள் சேவை மையத்தின் சார்பில், இந்தியா முழு வதும் குழுவாகப் பிரிந்து நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு  வாய்ப்பு என்ற தலைப் பில் சர்வே நடத்தப்பட் டது. இந்த சர்வேயின் முடிவுகளை விழித்து எழும் இளைஞர்கள் சேவை மைய நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணி யம் புதனன்று சேலத்தில் வெளி யிட்டார். அதில், 10 ஆண்டு கால பாஜக அரசு மாற வேண்டும். பாஜக அரசு ஒற்று மையாக உள்ள இந்தியாவை பிளவு படுத்தி, சீர்குலைத்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். பாஜக அரசால் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு  எந்த பயனும் இல்லை என்றும், மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களும், செல்வந்தர் களும் மட்டுமே பயனடைகிறார்கள். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபய ணம் மக்களிடம், அனைத்து மத மக்களி டத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன் ஜவுளி, நெசவுத்தொழில், விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு, சிறு தொழில் செய்யும் ஏழை எளிய மக்கள் பொருளா தாரத்தில் முன்னேற ஒரு வாய்ப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் மட்டு மல்ல இனி பாஜக இந்திய  மக்களிடமும் எடுபடாது என் றும், கடந்த 10 ஆண்டு கால பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தங்களுக்கு வேண்டாத அரசியல் கட்சி தலைவர்களை அமலாக்கத்துறை மூலம் கைது செய்து வருகின்றனர். 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை, சுங்கச் சாவடி கட்டணம் அதிகமாக உயர்ந்துள் ளது. இது மக்களிடையே கடும் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவிற்கு வாக் களித்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,  அத்வானி மற்றும் முன்னோடி தலைவர்க ளுக்கு மட்டுமே தவிர மோடிக்காக அல்ல  என்று வடமாநில லாரி ஓட்டுநர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், தேநீர் கடையில் அரசி யல் பேசும் மக்கள் மற்றும் பல்வேறு தரப்பி னர் தெரிவித்துள்ளனர். அதேசமயம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இவர்களில் ஒரு வர் பிரதமராக வேண்டும் என நினைக்கின்ற னர். இவர்களை மக்கள் நேசிக்கின்றனர். என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.